தமிழ்நாடு

தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை.. குளறுபடி ஏற்படுத்த பாஜக அரசு சூழ்ச்சி?

தமிழகத்தில் முதல் முறையாக இரண்டு கட்டமாக தேர்தலை நடத்த திட்டம். தேர்தல் தேதி பட்டியல் தயாரிக்கும் பணிகளில் தலைமை தேர்தல் ஆணையம் தீவிரம்.

தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை.. குளறுபடி ஏற்படுத்த பாஜக அரசு சூழ்ச்சி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எதிர்வரும் மே மாதம் தமிழ்நாடு, புதுவை, மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான காலம் முடியவுள்ள நிலையில், தேர்தல் நடத்தும் தேதியை இறுதி செய்யும் பணியை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

அதற்காக இந்த மாநிலங்களின் பண்டிகை, பள்ளி தேர்வுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வரைவு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளதாகக் தெரிகிறது. கடந்த முறை தமிழ்நாடு, புதுவை ஒரேகட்ட தேர்தலும், அஸ்ஸாமில் 2 கட்டங்களாகவும், மேற்குவங்கத்தில் 6 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த முறை கொரொனா காரணமாக தமிழகத்திலும், கேரளாவிலும் 2 கட்டங்களாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதத்திலேயே தேர்தல் நடைபெற வாய்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

குளறுபடிகள் இல்லாமல் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories