தமிழ்நாடு

“மகாகவி பாரதிக்கு சென்னையில் சிலை வைத்து பெருமைப்படுத்தியது தி.மு.க அரசு” : மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

“மகாகவி பாரதியின் பிறந்தநாளில் ‘என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ என்ற வரி நாட்டு நிலைமையை நினைவூட்டுகிறது” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“மகாகவி பாரதிக்கு சென்னையில் சிலை வைத்து பெருமைப்படுத்தியது தி.மு.க அரசு” : மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மகாகவி பாரதியாரின் 139வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சியினர், தேசிய தலைவர்கள், பள்ளி மாணவ மாணவிகள் என அனைவரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - என்று தமிழ்நாட்டு உணர்ச்சியைத் தட்டி எழுப்பிய எழுச்சிக் கவிஞர் பாரதியார் பிறந்த தினம் இன்று!

அவர் பிறந்த எட்டயபுரம் இல்லத்தை அரசு இல்லமாக்கி, தலைநகர் சென்னையில் அவருக்குச் சிலை வைத்து பெருமைப்படுத்தியது தி.மு.கழக அரசு!

இன்றைய நாட்டு நிலைமையை நினைக்கும் போது 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' என்ற பாரதியின் வரிகளே நினைவுக்கு வருகின்றன! வாழ்க பாரதி புகழ்! பெறுக அவர் சொன்ன உயர்வு!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories