தமிழ்நாடு

“சென்னை திரும்பும் மக்கள்; கூடுதல் குடிநீர் விநியோகம் செய்ய பரிசீலித்திடுக” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை!

ஊரடங்கு தளர்வால் மக்கள் சென்னைக்கு திரும்பி வருவதால், கூடுதலாக தண்ணீர் விநியோகம் செய்வது குறித்து பரிசீலிக்க குடிநீர் வழங்கல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“சென்னை திரும்பும் மக்கள்; கூடுதல் குடிநீர் விநியோகம் செய்ய பரிசீலித்திடுக” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் மக்கள், தங்கள் கைகளை கழுவுவதற்கும் , அத்தியாவசிய தேவைக்குமான தண்ணீரை விநியோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

சென்னை நகரில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தினமும் 1,350 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் சென்னை பெருநகர குடிநீர் வாரியம் 650 மில்லியன் லிட்டர் மட்டுமே சப்ளை செய்து வருகிறது.

“சென்னை திரும்பும் மக்கள்; கூடுதல் குடிநீர் விநியோகம் செய்ய பரிசீலித்திடுக” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை!

அதனால் கொரோனா பாதிப்பு நீங்கும் வரை தினமும் 3 மணி நேரம் தண்ணீர் விநியோகம் செய்ய குடிநீர் வாரியம் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை பெரு நகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் தரப்பில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் சென்னைக்கு ஒரு நாளைக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கொரானா ஊரடங்கிலும் மக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் சூர்யபிரகாசம் தரப்பில், கொரானா ஊரடங்கில் தளர்வு காரணமாக சொந்த ஊரில் இருந்து அதிகளவில் மக்கள் சென்னைக்கு திரும்பி வருவதால் சென்னைக்கு 1,200 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், சென்னை மக்களுக்கு கூடுதலாக தண்ணீர் விநியோகம் செய்வது குறித்து பரிசீலிக்க சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

banner

Related Stories

Related Stories