தமிழ்நாடு

“எக்மோர் இல்லை எழும்பூர் - இனி ‘தமிழில் மட்டுமே ஊர்ப்பெயர்கள்’ இருக்கும்” : அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

“எக்மோர் இல்லை எழும்பூர் - இனி  ‘தமிழில் மட்டுமே ஊர்ப்பெயர்கள்’ இருக்கும்” : அரசாணை வெளியீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செய்லபடுத்துதல் பற்றிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை உள்ளிட்ட பல முக்கிய பிரபல ஊர்களின் பெயர் தமிழ் உச்சரிப்புப்படி ஆங்கிலத்தில் எழுத உத்தரவிடப்பட்டுள்ளது.

உதாரணமாக எழும்பூரை ஆங்கிலத்தில் எக்மோர் என குறிப்பிட்டு வந்த நிலையில் இனி எழும்பூர் என்றே அழைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதே போல் திருவல்லிக்கேணி என்று இருப்பதை triplicane என்று இனிமேல் உச்சரிக்க கூடாது திருவல்லிக்கேணி என்றே உச்சரிக்க வேண்டும்.

மேலும் இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், “தண்டையார் பேட்டை ஆங்கிலத்தில் TONDIYARPET என இதுவரை எழுதப்பட்டது இனி THANDAIYAARPETTAI என எழுதப்படலாம்.

புரசைவாக்கம் இதுவரை ஆங்கிலத்தில் PURASAWALKAM என எழுதப்பட்டு வந்தது இனி PURASAIVAAKKAM என எழுதப்படவேண்டும்

வேப்பேரி இதுவரை VEPERY என எழுதப்பட்டது இனி VEPPERI என எழுதப்படவேண்டும்.

“எக்மோர் இல்லை எழும்பூர் - இனி  ‘தமிழில் மட்டுமே ஊர்ப்பெயர்கள்’ இருக்கும்” : அரசாணை வெளியீடு!

வ உ சி நகர் இதுவரை V.O.C. NAGAR என எழுதப்பட்டது இனி VA. OO. SI. NAGAR என எழுதப்படவேண்டும்.

பெரம்பூர் இதுவரை PERAMBUR என எழுதப்பட்டு வந்தது இனி PERAMBOOR என எழுதபடவேண்டும்.

அய்னாவரம் இதுவரை AYANAVARAM என எழுதப்பட்டு வந்தது இனி AYANPURAM என எழுதப்படவேண்டும்.

அமைந்தக்கரை இதுவரை AMINJIKARAI என எழுதப்பட்டு வந்தது இனி AMAINDHAKARAI என எழுதப்படவேண்டும்.

எழும்பூர் இதுவரை EGMORE என எழுதப்பட்டு வந்தது இனி EZHUMBOOR என எழுதப்படவேண்டும்.

சிந்தாதிரிப்பேட்டை இதுவரை CHINTADRIPET என எழுதப்பட்டு வந்தது, இனி CHINTHADHARIPETTAI என எழுதப்படவேண்டும்.

திருவல்லிக்கேணி இதுவரை TRIPLICANE என எழுதப்பட்டு வந்தது, இனி THIRUVALLIKKENI என எழுதப்படவேண்டும்.

மயிலாப்பூர் இதுவரை MYLAPORE என எழுதப்பட்டு வந்தது இனி MAYILAAPPOOR என எழுதப்பட வேண்டும்.

சைதாப்பேட்டை இதுவரை SAIDAPET என எழுதப்பட்டு வந்தது இனி SAITHAAPPETTAI என எழுதப்பட வேண்டும்.

ஆலந்தூர் இதுவரை ALANDUR என எழுதப்பட்டு வந்தது இனி AALANDHOOR என எழுதப்பட வேண்டும்.

அடையாறு இதுவரை ADAYAR என எழுதப்பட்டு வந்தது இனி ADAIYAARU என எழுதப்பட வேண்டும்.

தருமபுரி இதுவரை DHARUMAPURI என எழுதப்பட்டு வந்தது இனி THARUMAPURI என எழுதப்பட வேண்டும்.

தூத்துக்குடி இதுவரை TUTICORIN என எழுதப்பட்டு வந்தது இனி THOOTHTHUKKUDI என எழுதப்பட வேண்டும்”

“எக்மோர் இல்லை எழும்பூர் - இனி  ‘தமிழில் மட்டுமே ஊர்ப்பெயர்கள்’ இருக்கும்” : அரசாணை வெளியீடு!

இவ்வாறு 1018 ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கேற்ப ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதுபோன்ற எண்ணற்ற ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்திலும் அமையும் வகையிலும் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு செயற்படுத்தப்படும்.

இதற்கெனத் தொடராச் செலவினமாக ரூபாய் 5 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்படுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories