தமிழ்நாடு

“கையில் லத்தி இருக்க கூடாது; பொது அறிவை பயன்படுத்தினால் போதும்” : ஊரடங்கில் உள்ள போலிஸாருக்கு அறிவுரை!

ஊரடங்கு பணியில் உள்ள காவலர்கள் கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது; ஊரடங்கு உத்தரவு எதற்கு என, மக்களுக்கு புரியவைக்க வேண்டும் என போலிஸார்களுக்கு காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

“கையில் லத்தி இருக்க கூடாது; பொது அறிவை பயன்படுத்தினால் போதும்” :  ஊரடங்கில் உள்ள போலிஸாருக்கு அறிவுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுகிறது. அதன்படி நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அதனை சாதகமாக எடுத்துக்கொண்ட போலிஸார் சாலையில் வருபவர்கள் யார் என்று கூட விசாரிக்காமல் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதுபோல தாக்குதலால் பல இடங்களில் மருத்துவர்கள், செய்திதாள் விநியோகிப்பவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், போலிஸார் அடித்துவிரட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இதனால் காவல்துறைக்கு எதிராக மக்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்த துவங்கியுள்ளனர்.. இந்நிலையில் பணியில் இருக்கும் போலிஸார் பொதுமக்களை தாக்கக்கூடாது என உயர் அதிகாரிகள் அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

அதன்படி, சென்னை பூக்கடை காவல் ஆணையர் ராஜேந்திரன் ‘வாட்ஸ் ஆப்’ ஆடியோ வழியாக காவலர்களுக்கு வழங்கியுள்ள அறிவுரையில், “ஊரடங்கு பணியில் உள்ள காவலர்கள் கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது.

ஊரடங்கு உத்தரவு எதற்கு என, மக்களுக்கு புரியவைக்க வேண்டும். பொது மக்களை மிரட்டவோ, பயமுறுத்தவோ கூடாது; அவர் களை அடிக்க கூடாது. இவ்வாறு நடந்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும். பொது மக்களுக்கு விபரீதம் புரியவில்லை. அவர்களி டம் பக்குவமாக பேசி, புரிய வைத்து அனுப்புங்கள்.

கால்நடை தீவனங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை விட்டு விடுங்கள். வங்கி ஏ.டி.எம்.,மிற்கு செல்வோர், அத்தியா வசிய தேவைக்காக செல்கின்றனர். கடைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்களிடம், சமூக விலகல் குறித்து சொல்லுங்கள்.

“கையில் லத்தி இருக்க கூடாது; பொது அறிவை பயன்படுத்தினால் போதும்” :  ஊரடங்கில் உள்ள போலிஸாருக்கு அறிவுரை!

ஒரு அடி இடைவெளி விட்டு, பொருட்கள் வாங்க அறிவுறுத்தலாம். துணிக்கடை, நகைக் கடைகள் முறையாக மூடப்பட்டுள்ளதா என, கண்காணியுங்கள். சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களை வழிமறிக்க வேண்டாம்; அதை, போக்கு வரத்து காவலர்கள் பார்த்துக் கொள்வர். பொது அறிவை பயன்படுத்தினால், இது போன்ற பிரச்னைகள் வராது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories