தமிழ்நாடு

பட்டாசுகளை ரயிலில் கொண்டுச் சென்றால் 3 ஆண்டு சிறை - ரயில்வே போலிஸார் எச்சரிக்கை

ரயிலில்  பட்டாசு கொண்டுச் சென்றால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே போலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டாசுகளை ரயிலில் கொண்டுச் சென்றால் 3 ஆண்டு சிறை - ரயில்வே போலிஸார் எச்சரிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தீ விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளோ, வெடி பொருட்களோ ரயில் கொண்டு செல்லக்கூடாது என்றும் மீறினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ரயில்வே போலிஸார் எச்சரித்துள்ளனர்.

பட்டாசுகளை ரயிலில் கொண்டுச் சென்றால் 3 ஆண்டு சிறை - ரயில்வே போலிஸார் எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தஞ்சை ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு போலிஸாரின் கலைக் குழுவினர் பயணிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்

பட்டாசுகளை ரயிலில் கொண்டுச் சென்றால் 3 ஆண்டு சிறை - ரயில்வே போலிஸார் எச்சரிக்கை

ரயிலில் வெடி பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், ரயில் நிலைய வளாகத்திற்குள் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என துண்டு பிரசுரம் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பட்டாசுகளை ரயிலில் கொண்டுச் சென்றால் 3 ஆண்டு சிறை - ரயில்வே போலிஸார் எச்சரிக்கை

மேலும், விதியை மீறி ரயிலிலோ, ரயில் நிலைய வளாகத்திலோ தீ விபத்தை ஏற்படுத்தக் கூடிய பட்டாசு மற்றும் வெடி பொருட்களை கொண்டுச் சென்றால் ரயில்வே பாதுகாப்புச் சட்டப் பிரிவு 164-இன் கீழ், 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்றும் தஞ்சை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சந்திர சேகரன் தெரிவித்தார்.

பட்டாசுகளை ரயிலில் கொண்டுச் சென்றால் 3 ஆண்டு சிறை - ரயில்வே போலிஸார் எச்சரிக்கை

இது போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories