தமிழ்நாடு

லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை : திருவாரூர் அ.ம.மு.க பிரமுகரிடம் போலிஸார் விசாரணை!

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் அ.ம.மு.க பிரமுகர் திருமாறன் உட்பட இரண்டு பேரிடம் தனிப்படை போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை : திருவாரூர் அ.ம.மு.க பிரமுகரிடம் போலிஸார் விசாரணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனிப்படை போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 பேர் கொண்ட கும்பல் நகைக்கடையில் கைவரிசை காட்டியுள்ளது என முதற்கட்ட விசாரணை முடிவில் தெரியவந்துள்ளது. இதுவரை கொள்ளை தொடர்பாக மணிகண்டன், முரளி, கனகவள்ளி, கார்த்தி ஆகிய நால்வரை கைது செய்த காவல்துறை 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது.

நகைக்கொள்ளையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருவாரூர் முருகன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சீராத்தோப்பைச் சேர்ந்த பிரதாப் என்ற நபரை பிடித்து திருச்சிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு இருக்கையில், புதிய திருப்பமாக திருவாரூரைச் சேர்ந்த அ.ம.மு.க பிரமுகரான திருமாறன் என்பவரிடம் லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பாக தனிப்படை போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories