தமிழ்நாடு

துப்புரவு பணிக்கு விண்ணப்பித்த எம்.டெக், எம்.காம், எம்.எஸ்சி பட்டதாரிகள்!

தமிழக சட்டப்பேரவையில் காலியாகவுள்ள துப்புரவாளர் பணிக்கு பல்வேறு பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

துப்புரவு பணிக்கு விண்ணப்பித்த எம்.டெக், எம்.காம், எம்.எஸ்சி பட்டதாரிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழக சட்டப்பேரவையில் காலியாகவுள்ள 14 துப்புரவு பணியாளர் இடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்தப் பணிக்கு சம்பளமாக 15 ஆயிரத்து 700 ரூபாய் முதல் அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

துப்புரவு பணிக்கு விண்ணப்பித்த எம்.டெக், எம்.காம், எம்.எஸ்சி பட்டதாரிகள்!

15 இடங்களுக்கான துப்பரவு பணிக்கு பொறியியல், எம்.டெக், எம்.காம், எம்.எஸ்சி படித்தவர்கள் என மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கின்றனர். நினைத்ததை விட அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்ததால், 23ம் தேதி தொடங்கி 40 நாட்கள் தினமும் 100 பேரிடம் நேர்காணல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

துப்புரவு பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கும் நிலையில் இருக்கிறது தமிழகத்தின் பொருளாதாரமும், வேலையின்மையும்.

banner

Related Stories

Related Stories