தமிழ்நாடு

கீழடியில் 5-வது கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம் : சு.வெங்கடேசன் எம்.பி ஆய்வு!

கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி இன்று தொடங்கியது. இந்தப் பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடக்கிவைத்தார். மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

 கீழடியில் 5-வது கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம் :  சு.வெங்கடேசன் எம்.பி ஆய்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் அருகே கீழடியில் சங்ககாலத் தமிழர்களின் நாகரிக வாழ்விடம் குறித்து, இந்திய தொல்லியல்துறை கடந்த 2015-ல் அகழ்வாராய்ச்சி தொடங்கியது.

தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் 2 கட்டங்களாக அகழாய்வு நடத்தப்பட்டது. அதனைத் தொடந்து தமிழக தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் 2 தொல்லியலாளர், 4 அகழாய்வாளர்கள் அடங்கிய குழு, கடந்தாண்டு ஏப். 18 முதல் செப். 30-ம் தேதி வரை 3 மற்றும் 4ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடத்தினர்.

செப்டம்பர் மாதம் 30-ம் தேதியோடு 4ம் கட்ட அகழாய்வு முடித்தது. அகழ்வாராய்ச்சியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கிடைத்தன. 5ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள ரூ.57 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதமே இந்த ஐந்தாம் கட்டப்பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என ஆய்வுகள் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், ஜூன் முதல் வாரம் அகழாய்வு பணி தொடங்கும் என தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி இன்று தொடங்கியது.

இந்த 5-வது கட்ட அகழாய்வு பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். அவருடன் மதுரை மக்களவை தொகுதி சிபிஐ(எம்) எம்.பி சு.வெங்கடேசன் கலந்துகொண்டார். இதற்கு முன் சு.வெங்கடேசன் கீழடி குறித்து பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories