தமிழ்நாடு

குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க வழிவகுக்காமல் டெல்டா விவசாயிகளை கைவிரித்த அ.தி.மு.க அரசு!

மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது

குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க வழிவகுக்காமல் டெல்டா விவசாயிகளை கைவிரித்த அ.தி.மு.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே கடந்த 7 ஆண்டுகளாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படவில்லை

இந்த ஆண்டாவது, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா என்று எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விட முடியாது என பேசியுள்ளார்

குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் ஒவ்வொரு ஆண்டும், மெத்தமனமாக செயல்படும் அதிமுக அரசு. இந்த ஆண்டும் கைவிரித்திருப்பது டெல்டா விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

banner

Related Stories

Related Stories