தமிழ்நாடு

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மரணம்!

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததுள்ளார்.

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மரணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்னிக்கை மே 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் துணை ராணுவப்படையினர், காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மூர்த்தி பணியில் இருந்துள்ளார். அவருக்கு தீடீரென நெஞ்சுசலி ஏற்பட்டுள்ளது. சம்ப இடத்திலேயே காவல் உதவி ஆய்வாளர் மூர்த்தி மயக்கம் அடைந்துள்ளார்.

இதையடுத்து அவரை பாவனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பாரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தேர்தல் பணியின் போது காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் காவல்துறை வாட்டரத்தில் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories