விளையாட்டு

"ஒருவரின் வலியை எந்த பயிற்சியாளராலும் மதிப்பிட முடியாது" - ஷ்ரேயாஸ்க்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு !

உண்மையாக ஒருவரின் வலியை எந்த பயிற்சியாளராலும் மதிப்பிட முடியாது என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

"ஒருவரின் வலியை எந்த பயிற்சியாளராலும் மதிப்பிட முடியாது" - ஷ்ரேயாஸ்க்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒரு காலத்தில் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக ஆடி வரும் வீரர்களே இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்கள். இப்போது இந்திய அணியில் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் அனைவரும் ரஞ்சி கோப்பை உருவாக்கிய நாயகர்கள்தான்.ஆனால், இந்த காலத்தில் ஐபிஎல் வந்ததால் ரஞ்சி கோப்பை தொடர் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும், இந்திய அணியில் ஆடும் நட்சத்திர வீரர்களும் ரஞ்சி கோப்பையில் ஆடாமல் புறக்கணித்தனர். சமீப காலத்தில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது .

அதனைத் தொடர்ந்து காயம் அடைந்த வீரர்களை தவிர அனைவரும் ரஞ்சி அணியில் ஆடவேண்டும் என்று பிசிசிஐ அதிரடி உத்தரவிட்டது. ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பிடிப்பு காரணமாக ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாமல் விலகினார்.

ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு அவரின் உடல்நிலை சரியாக உள்ளது என தேசிய கிரிக்கெட் அகாடெமியின் மருத்துவ பிரிவு தலைவர் நிதின் படேல் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரஞ்சி கோப்பையில் ஆடாமல் தவிர்க்கவே ஷ்ரேயாஸ் முதுகு பிடிப்பு என்று கூறினார் என சர்ச்சைகள் எழுந்தது.

"ஒருவரின் வலியை எந்த பயிற்சியாளராலும் மதிப்பிட முடியாது" - ஷ்ரேயாஸ்க்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு !

அதன் பின்னர் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயரின் பெயர் நீக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. இதனால் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவது கடினம் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உண்மையாக ஒருவரின் வலியை எந்த பயிற்சியாளராலும் மதிப்பிட முடியாது என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், "ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி தொடரின் காலிறுதியில் விளையாடவில்லை என்பது உண்மை தான். அவர் இங்கிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் முதுகு வலியால் தம்மால் விளையாட முடியாது என்பதை நிர்வாகத்திடம் கூறிவிட்ட பின்னர், அவர் ஃபிட்டாகி விளையாட தயாராக இருப்பதாக தேசிய கிரிக்கெட் அகாடெமி கூறியுள்ளது. இது அவருக்கு எதிராக நடந்ததை போலவே இருக்கிறது.

உண்மையில், ஒருவரின் வலியை எந்த பயிற்சியாளராலும் மதிப்பிட முடியாது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்பாகவும் அவர் இந்திய அணி நிர்வாகத்தின் கோரிக்கையால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடினார். எனவே ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்கு எப்போதும் மறுப்பு தெரிவித்ததாக தெரியவில்லை. ஆனாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories