விளையாட்டு

கோவாவை வீழ்த்தி தமிழ்நாடு அபார வெற்றி: மீண்டும் கலக்கிய இளம் வீரர் சாய் சுதர்சன்- அடுத்து இந்திய அணிதான்?

தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கோவாவை வீழ்த்தி தமிழ்நாடு அபார வெற்றி: மீண்டும் கலக்கிய இளம் வீரர் சாய் சுதர்சன்- அடுத்து இந்திய அணிதான்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் கடந்த ஆண்டு இடம்பிடித்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அந்த அணி சாய் சுதர்சனை தக்கவைத்தது.

அதன்பின் ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் குஜராத் அணி சாய் சுதர்சனுக்கு வாய்ப்புகள் வழங்கியது. அதன்பின்னர் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் 43 ரன்கள் குவித்து ரிடையர்ட் கட் முறையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் 47 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரிகள் என 96 ரன்கள் விளாசி இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்து ஓய்வறைக்கு சென்ற அவருக்கு குஜராத் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதன் பின்னர், ஐபிஎல் தொடரில் தான் காட்டிய அதிரடியை அவர் டி.என்.பி.எல் தொடரிலும் தொடர்ந்தார். இதன் காரணமாக அவருக்கு இலங்கையின் கொழும்பு நகரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 ஏ அணிகள் பங்கேற்கும் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

கோவாவை வீழ்த்தி தமிழ்நாடு அபார வெற்றி: மீண்டும் கலக்கிய இளம் வீரர் சாய் சுதர்சன்- அடுத்து இந்திய அணிதான்?

இந்த தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி சதம் விளாசினார். தொடர்ந்து இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சர்ரே அணி சாய் சுதர்சனை ஒப்பந்தம் செய்தது. அங்கு ஹம்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 73 ரன்களை விளாசி மோசமான நிலையில் இருந்து சர்ரே அணியை காப்பாற்றினார்.

பின்னர் இரண்டாவது இன்னிங்சில் அணியை தோல்வியில் இருந்த காக்க இறுதிவரை போராடி கடைசி வீரராக 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதே நேரம், பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இரண்டு அணிகளை சேர்ந்த வீரர்களும் சொதப்பிய நிலையில், அங்கு சிறப்பாக ஆடிய சாய் சுதர்சனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டை தெரிவித்தனர்.

கோவாவை வீழ்த்தி தமிழ்நாடு அபார வெற்றி: மீண்டும் கலக்கிய இளம் வீரர் சாய் சுதர்சன்- அடுத்து இந்திய அணிதான்?

தொடர்ந்து தற்போது நடைபெற்றுவரும் விஜய் ஹசாரே தொடரில் கோவா அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணியின் தொடக்கவீரராக களமிறங்கினர். இந்தப் போட்டியில் அபாரமாக ஆடிய அவர், 125 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரின் அதிரடி காரணமாக தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய கோவா அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. எனினும் இறுதியில், 50 ஓவர்களில் அந்த அணியால் 10 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதனால் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories