விளையாட்டு

"மழை பெய்யும் என முன்பே சொன்னோம்.. போட்டிகள் பாதிக்கப்பட காரணம் ஜெய் ஷாதான்" -பாக். வாரியம் விமர்சனம் !

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் நஜம் சேதி எங்கள் பேச்சை மீறி நடந்த பிசிசிஐ தான் ஆசிய தொடரில் போட்டிகள் பாதிக்கப்பட காரணம் என விமர்சித்துள்ளார்.

"மழை பெய்யும் என முன்பே சொன்னோம்.. போட்டிகள் பாதிக்கப்பட காரணம் ஜெய் ஷாதான்" -பாக். வாரியம் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.

இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பைத்தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. எனினும், ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இது குறித்த சர்ச்சை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நிலையில், பிசிசிஐ-யின் பணபலத்துக்கு இதர ஆசிய அணிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், இறுதியில் பாகிஸ்தான் இறங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஆசிய கோப்பைக்கான அட்டவணையில், ஒன்பது ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட உள்ள நிலையில், வெறும், நான்கு ஆட்டங்கள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறவுள்ளன.

"மழை பெய்யும் என முன்பே சொன்னோம்.. போட்டிகள் பாதிக்கப்பட காரணம் ஜெய் ஷாதான்" -பாக். வாரியம் விமர்சனம் !

அதன்படி இலங்கையில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் நடைபெற்ற இந்தியா -நேபாளம் போட்டியிலும் மழை குறிக்கிட்டதால் ஆட்டத்தின் ஓவர்கள் குறைக்கப்பட்டது. அதோடு இன்னும் மீதம் இருக்கும் போட்டிகளும் மழையால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

பொதுவாக இந்த காலகாலத்தில் இலங்கையில் மழை காலம் என்பதால் இலங்கை நிர்வாகமே இந்த மாதங்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துதான் விளையாடும். ஆனால் பாகிஸ்தானில் விளையாடமாட்டோம் என்ற பிசிசிஐ-யின் பிடிவாதம் காரணமாக ஆசிய கோப்பை போன்ற முக்கியமான தொடர் இலங்கையில் நடைபெற்று மழை காரணமாக பாதிக்கப்படும் நிலை இருக்கிறது. இதனால் பிசிசிஐ-யை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

"மழை பெய்யும் என முன்பே சொன்னோம்.. போட்டிகள் பாதிக்கப்பட காரணம் ஜெய் ஷாதான்" -பாக். வாரியம் விமர்சனம் !

இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் நஜம் சேதி எங்கள் பேச்சை மீறி நடந்த பிசிசிஐ தான் போட்டிகள் இவ்வாறு பாதிக்கப்பட காரணம் என விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், " பாகிஸ்தானில் ஆடிய இந்தியா மறுத்த நிலையில், ந்து போட்டிகளை பாகிஸ்தானிலும், எட்டு போட்டிகளை அமீரகத்திலும் நடத்துமாறு கூறினேன். ஆனால், அதை இந்தியா மறுத்து, தாங்கள் சொல்வதை ஏற்கவில்லை என்றால் தொடரை முழுவதுமாக இலங்கைக்கு கொடுத்து விடுவோம் எனக் கூறினார்கள்.

அப்படி நடந்தால் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது எனக் கூறியபின்னர், பாகிஸ்தானில் நான்கு போட்டிகளையும், இலங்கையில் மற்ற போட்டிகளையும் நடத்த ஒப்புக்கொண்டனர். அப்போது இலங்கையில் மழை வரும் சாத்தியம் உள்ளதால் போட்டிகள் பாதிக்கப்படும், அதனால் ஐக்கிய அமீரகத்தில் போட்டியை வைத்துக்கொள்வோம், எனக் கூறியபோது, ஜெய் ஷா அதை மறுத்து விட்டார். இப்பொது எங்களின் ஆலோசனையையும் மீறி ஏன் இலங்கையில் போட்டிகள் நடத்தப்பட்டன என்பதை ஜெய் ஷா தான் கூற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories