விளையாட்டு

தலைமைப்பண்பு குறித்து தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டது இதுதான் -மனம் திறந்த ருத்துராஜ் கெய்க்வாட் !

தோனி மற்றும் சென்னை அணியில் இருந்துதான் நான் ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டேன் என இந்திய அணி வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.

தலைமைப்பண்பு குறித்து தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டது இதுதான் -மனம் திறந்த ருத்துராஜ் கெய்க்வாட் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.

அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். தோனியின் தனித்துவமான தலைமைப்பன்பாலேயே இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பைகளை குவித்ததாக பல்வேறு வீரர்களும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

தலைமைப்பண்பு குறித்து தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டது இதுதான் -மனம் திறந்த ருத்துராஜ் கெய்க்வாட் !

இந்த நிலையில், தோனி மற்றும் சென்னை அணியில் இருந்துதான் நான் ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டேன் என இந்திய அணி வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், ”எனக்கு சோசியல் மீடியாவை பயன்படுத்தும் பழக்கம் இல்லை. அதனால் யாரும் ஏதும் விமர்சித்தாலும் அது எனக்கு தெரியது. அதேபோல் என்னை பற்றி யார் என்ன கருத்து சொன்னாலும் கவலைப்படப் போவதில்லை. இதுபோன்ற விஷயங்களை சென்னை அணியில் இருந்த போதுதான் கற்றுக் கொண்டேன்.

அந்த அணியில் விளையாடும்போது தோனி எப்போதும் ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்து, அது மட்டும் போதுமானது, எதிர்காலத்தை பற்றி கவலைக் கொள்ளக் கூடாது என சொல்லிக் கொண்டே இருப்பார். அவரிடம் இருந்து நான் தலைமைபண்பு குறித்து கற்றுக்கொண்டுள்ளேன். தலைமைப் பண்பு என்பது அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கு முழுமையான நம்பிக்கையையும், மன உறுதியையும் அளிப்பது தான்.வீரர்களின் மனநிலை என்ன, என்ன சிந்திக்கிறார்கள் என்பதை அறிந்து கேப்டன் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories