விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீழ்ச்சிக்கு காரணம் இதுதான்- இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியது என்ன?

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீழ்ச்சிக்கு காரணத்தை இந்திய அணி முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீழ்ச்சிக்கு காரணம் இதுதான்- இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

இந்நிலையில் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் முதல் முறையாக மேற்கிந்திய தீவுகள் அணிகள் அணி உலககோப்பைக்கு நேரிடையாக தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது.

இதனால் அந்த அணி ஜிம்பாப்பேயில் நடைபெறற தகுதிச்சுற்றுப்போட்டியில் விளையாடியது. ஆனால், இந்தத் தொடரில் ஏ பிரிவில் இருந்த மேற்கிந்திய தீவுகள் அணி ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்தது. எனினும் அந்த பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீழ்ச்சிக்கு காரணம் இதுதான்- இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியது என்ன?

ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியதால் போனஸ் புள்ளிகள் ஏதும் இல்லாமல் சூப்பர் 6 சுற்றுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி முன்னேறியது. தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி சூப்பர் 6 சுற்றில் ஸ்காட்லாந்து அணியை சந்தித்தது.இந்த போட்டியில் முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய ஸ்காட்லாந்து அணி, 43.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 185 எடுத்து அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி உலககோப்பை தொடருக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

அந்த அணியின் இந்த நிலைக்கு பல்வேறு முன்னாள் வீரர்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அந்த அணியின் இந்த வீழ்ச்சிக்கு மைதானமே முக்கிய காரணம் என இந்திய அணி முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களால் சமீப காலமாக தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இது அனைவர்க்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

அதோடு அவர்கள் ஆடும் மைதானமும் அவர்களின் திறமைக்கு ஏற்றவகையில் இல்லை. அதனால் அவர்களின் ஆட்டம் எடுபடவில்லை. உலககோப்பைக்கு அவர்கள் தகுதி பெறாததற்கு காரணமும் இதுதான். அதே நேரம் மேற்கிந்திய தீவுகள் அணி முன்பு இருந்ததைப் போல இப்போது இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்"என கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories