விளையாட்டு

"தென்னிந்தியாவில் எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது".. -பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் பேச்சால் பரபரப்பு!

இந்தியாவில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அனைத்தையும் தாண்டி அங்கு சென்று விளையாட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி கூறியுள்ளார்.

"தென்னிந்தியாவில் எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது".. -பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் பேச்சால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.

இந்த சூழலில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தனது முடிவில் இந்தியா உறுதியாக இருந்த காரணத்தால் வேறுவழியின்றி பாகிஸ்தான் இறங்கிவந்து இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும், இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறினால் அதையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும் ஒப்புக்கொண்டது.

"தென்னிந்தியாவில் எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது".. -பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் பேச்சால் பரபரப்பு!

அதே நேரம் ஐசிசியின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் கலந்துகொள்ளும் என்றும் கூறப்பட்டது. மேலும், சமீபத்தில் பாகிஸ்தான் இந்தியா மோதும் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெறும் என்பது உறுதியானது. இதனால் பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தால் மட்டுமே அந்த அணி இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும், இல்லாவிடில் உலகக்கோப்பையை புறக்கணிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அனைத்தையும் தாண்டி அங்கு சென்று விளையாட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இது குறித்து பேசும்போது, " இந்தியாவுக்கு சென்று விளையாடுவது நிச்சயம் அழுத்தம் நிறைந்த சூழல்தான். ஆனால் அனைத்தையும் தாண்டி அங்கு சென்று விளையாடுவது தான் சரியாக இருக்கும்.

நாங்கள் விளையாடும்போது, இந்தியாவிற்கு செய்வது என்றாலே எங்கள் வாழ்க்கையில் அதிக அழுத்தம் நிறைந்த தருணமாகத்தான் இருந்தது. ஒருமுறை பெங்களூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் வென்றுவிட்டு ஹோட்டலுக்குப் புறப்பட்டபோது, எங்கள் ​​அணியின் பேருந்து மீது கற்கள் வீசப்பட்டன. ஆனால், அனைத்தையும் தாண்டிதான் அங்கு விளையாடினோம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories