விளையாட்டு

அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவார் என BCCI எதிர்பார்க்கவில்லை -கோலி குறித்து கங்குலி கூறியது என்ன?

டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகியது ஏன் என்பதை விராட் கோலி மட்டுமே விளக்க முடியும் என பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவார் என BCCI எதிர்பார்க்கவில்லை -கோலி குறித்து கங்குலி கூறியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. அந்தத் தொடருக்கு முன்பு திடீரென டி-20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த உலகக் கோப்பையே இந்திய டி-20 அணிக்கு தான் தலைமை வகிக்கும் கடைசித் தொடர் என்று கூறினார். ஒருநாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தக் காத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

அவர் தலைமையிலான அணி தொடர்ந்து ஐ.சி.சி தொடர்களை வெற்றி பெறத் தவறியதால் அவர் மீது தொடர்ந்து விமர்சனம் எழுந்துகொண்டே இருந்தது. அதனால், இந்த முடிவை எடுத்திருப்பார் என்று கருதப்பட்டது. அந்த முடிவை அறிவித்த சில நாள்களிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐ.பி.எல் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் அந்த சீசனோடு விலகுவதாகக் கூறினார்.

கோலி பதவி விலகியதும் இந்திய டி-20 அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டார்.இருந்தாலும், ஒருநாள் அணிக்கு கேப்டனாகத் தொடர கோலி விருப்பம் தெரிவித்திருந்ததால் எந்த மாற்றமும் நிகழாது என்று கருதப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை அறிவிக்கும்போது, ரோஹித்தை டி-20 மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டனாக அதிகாரபூர்வமாக அறிவித்தது பிசிசிஐ.

அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவார் என BCCI எதிர்பார்க்கவில்லை -கோலி குறித்து கங்குலி கூறியது என்ன?

அந்த அறிவிப்பு பெரிய சர்ச்சையை ஏற்படுத்த, “கோலியை டி-20 கேப்டன் பதவியிலிருந்து விலகவேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால், அவர் அதைக் கேட்கவில்லை. வைட் பால் கிரிக்கெட்டின் இரண்டு ஃபார்மட்டுக்கு இரண்டு கேப்டன்கள் இருப்பது சரியான முடிவில்லை என்று கருதியதால், செலக்டர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்” என்று அதுபற்றிக் கூறினார் அப்போதைய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி.

ஆனால், அதை மறுத்த விராட் கோலி “நான் பதவி விலகுகிறேன் என்று சொன்னபோது யாரும் அதற்கு மறுப்புச் சொல்லவில்லை. எல்லோரும் ஏற்றுக்கொள்ளவே செய்தனர். அறிவிப்புக்கு ஒன்றரை மணி நேரம் முன்புதான் அவர்கள் முடிவு தனக்குத் தெரிவிக்கப்பட்டது" என்று கூறினார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகியது ஏன் என்பதை விராட் கோலி மட்டுமே விளக்க முடியும் என பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி கூறியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது குறித்து கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை BCCI எதிர்பார்க்கவில்லை. டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகியது ஏன் என்பதை விராட் கோலி மட்டுமே விளக்க முடியும். ஆனால், அதைப் பற்றி இப்போது பேசுவது என்பது அர்த்தமற்ற ஒன்று. இந்தியாவின் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக யார் இருக்க வேண்டும்? என்று கேட்டால் எஅது ரோகித் மற்றும் ராகுல் டிராவிட்தான் எனக் கூறுவேன்" என்று கூறியுள்ளார். .

banner

Related Stories

Related Stories