விளையாட்டு

"தோனி நினைத்து இருந்தால் இன்னும் சில ஆண்டுகள் அதை செய்து இருக்கலாம்" -வாசிம் அக்ரம் கூறியது என்ன ?

தோனி நினைத்து இருந்தால் அவர் இன்னும் சில ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் ஆகியிருக்கலாம் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

"தோனி நினைத்து இருந்தால் இன்னும் சில ஆண்டுகள் அதை செய்து இருக்கலாம்" -வாசிம் அக்ரம் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.

அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

"தோனி நினைத்து இருந்தால் இன்னும் சில ஆண்டுகள் அதை செய்து இருக்கலாம்" -வாசிம் அக்ரம் கூறியது என்ன ?

இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். பெரும்பாலும் இந்த தொடர்தான் அவரின் இறுதி ஐபிஎல் தொடராக இருக்கும் என கருதப்பட்டதால் சென்னை அணி விளையாடும் இடங்களில் எல்லாம் தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள் குவிந்தனர்.

"தோனி நினைத்து இருந்தால் இன்னும் சில ஆண்டுகள் அதை செய்து இருக்கலாம்" -வாசிம் அக்ரம் கூறியது என்ன ?

அதே நேரம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றிய பின்னர் தோனி உடல்நலம் ஒத்துழைத்தால் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாடுவேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், தோனி நினைத்து இருந்தால் அவர் இன்னும் சில ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் ஆகியிருக்கலாம் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "தோனி நினைத்திருந்தால் இந்திய அணிக்கு இன்னும் சில வருடங்கள் விளையாடி இருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யாமல் எந்த இடத்தில் ஓய்வு பெற வேண்டும் என்பதை புரிந்து அதற்கு ஏற்ப ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் அவர் விளையாடி வரும் நிலையில், ஒரு அணியுடன் சேர்ந்து ஐந்து ஐபிஎல் தொடரை வெல்வது என்பது ஒரு மிகப்பெரிய சவால். ஆனால் அதனை தோனி செய்துக் கட்டியிருக்கிறார். அதோடு தோனி அடுத்த வருடமும் இன்னும் உடல்தகுதியோடு வந்து ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories