விளையாட்டு

மும்பை மைதானத்தில் CSK ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பா? - வெளிவந்த பரபரப்பான தகவல்.. உண்மை நிலை என்ன ?

வான்கடே மைதானத்தில் மும்பை அணிக்கு ஆதரவாக செய்யப்பட்ட மாற்றம் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மைதானத்தில் CSK ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பா? - வெளிவந்த பரபரப்பான தகவல்.. உண்மை நிலை என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளங்கி வருகின்றன. அதே போல இந்த இரு அணிகளுக்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. இந்த அணிகள் சொந்த மைதானத்தில் விளையாடும்போது அரங்கமே அந்த அணிகளின் வண்ணங்களால் நிறைந்து இருக்கும்.

மும்பை மைதானத்தில் CSK ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பா? - வெளிவந்த பரபரப்பான தகவல்.. உண்மை நிலை என்ன ?

ஆனால், இந்த இரு அணிகளை ஒப்பிட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே அதிக ரசிகர்கள் இருப்பது தெரியவரும். சென்னை அணி சொந்த மைதானத்தில் விளையாடினாலும் அடுத்த மைதானத்தில் விளையாடினாலும் மைதானம் மஞ்சள் நிறத்தால் நிறைந்திருக்கும். இந்த ஆண்டு கூட குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணிய சொந்த மைதானத்தில் சென்னை விளையாடினாலும் அந்த மனிதம் சென்னை அணி ஆதரவாளர்களால் நிறைந்திருந்தது.இதுதான் சென்னை அணியின் பலமாக விளங்கிவருகிறது.

இந்த நிலையில், நாளை சென்னை மற்றும் மும்பை அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன. இதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்ட நிலையில், முன்னதாக வான்கடே மைதானத்தில் மும்பை அணிக்கு ஆதரவாக செய்யப்பட்ட மாற்றம் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மைதானத்தில் CSK ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பா? - வெளிவந்த பரபரப்பான தகவல்.. உண்மை நிலை என்ன ?

மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் தொடருக்காக மும்பை வான்கடே மைதானத்தில் இரு கேலரிகள் MI FAN ZONE என்ற பெயரில் உருவாக்கப்படுள்ளது. இந்த கேலரிகளில் பிற அணிகளின் ரசிகர்களுக்கோ பிற அணிகளின் நிறமணிந்த உடைகளில் வருவதற்கோ அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஐபிஎல் தொடரில் யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு பிடித்த இடத்தில டிக்கெட் வாங்கலாம் என்ற நிலையில், வான்கடே மைதானத்தின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அடுத்ததாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை ஆடவுள்ள நிலையில், சென்னை அணியின் ரசிகர்கள் மைதானத்தில் நிறைந்திருப்பதை தடுக்கவே இதுபோன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என சென்னை அணியின் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இந்த விதிமுறை அனைத்து போட்டிகளுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories