விளையாட்டு

"தோனியை முதன் முதலில் பார்த்தபோது இப்படித்தான் நினைத்தேன்" -முதல் சந்திப்பு குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா!

இந்திய அணி மற்றும் சென்னை அணியில் நீண்ட நாள் ஆடியவருமான ரெய்னா தோனியுடனான தனது முதல் அனுபவத்தை பற்றி கூறியுள்ளார்.

"தோனியை முதன் முதலில் பார்த்தபோது இப்படித்தான் நினைத்தேன்" -முதல் சந்திப்பு குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.

அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

"தோனியை முதன் முதலில் பார்த்தபோது இப்படித்தான் நினைத்தேன்" -முதல் சந்திப்பு குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா!

இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில், தோனியின் நெருங்கிய நண்பரும் அவருடன் இந்திய அணி மற்றும் சென்னை அணியில் நீண்ட நாள் ஆடியவருமான ரெய்னா தோனியுடனான தனது முதல் அனுபவத்தை பற்றி கூறியுள்ளார்.

"தோனியை முதன் முதலில் பார்த்தபோது இப்படித்தான் நினைத்தேன்" -முதல் சந்திப்பு குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா!

இது தொடர்பாக பேசிய அவர், "2004 ஆம் ஆண்டு கிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலம் அணிகளுக்கு இடையிலான உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில்போது ஜார்க்கண்ட்டிலிருந்து நீண்ட முடியை வைத்திருக்கும் ஒரு வீரர் அதிரடியாக விளையாடுகிறார் என்று கேள்விப்பட்டோம். அப்போது நாங்கள் ஒரு நாள் ஹோட்டலில் தோனியை பார்த்தோம். வீரரின் கமெண்ட் அவர் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டு பட்டர் சிக்கன், ரொட்டி சாப்பிட்டு கொண்டு இருந்தார்.

இதை பார்த்து எங்கள் அணியில் வீரர் ஒருவர் இந்த வீரர் பற்றியா எல்லோரும் பேசி வருகிறார்கள்? இவர் நமக்கு எதிராக பெரிய ஸ்கோர் ஒன்றும் அடிக்க மாட்டார் என்று கூறினார். ஆனால் போட்டியில் அப்படி சொந்த அந்த வீரரின் பந்தை தோனி நாலாபுறமும் சிதறடித்தார்" என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு தோனி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories