விளையாட்டு

"இந்திய மண்ணில் அவர்களை மிஞ்சியர்கள் வேறு யாரும் இல்லை" -ரோஹித் புகழ்ந்த அந்த வீரர்கள் யார் தெரியுமா?

இந்திய கண்டிசன்களில் அஸ்வின், ஜடேஜாவை மிஞ்சிய வீரர்கள் வேறு யாரும் இல்லை என ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

"இந்திய மண்ணில்  அவர்களை மிஞ்சியர்கள் வேறு யாரும் இல்லை" -ரோஹித் புகழ்ந்த அந்த வீரர்கள் யார் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்கவைத்தது. மேலும் 4 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது

பின்னர் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற இந்தூரில் தோல்வியின்பிடியில் இருந்து மீண்டு இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இருந்தே அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி இந்தியாவை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது.மூன்றே நாளில் முடிந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

"இந்திய மண்ணில்  அவர்களை மிஞ்சியர்கள் வேறு யாரும் இல்லை" -ரோஹித் புகழ்ந்த அந்த வீரர்கள் யார் தெரியுமா?

அதன் பின்னர் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அஹமதாபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 480 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 571 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி175/2 என்ற நிலையில் இருந்தபோது ஆட்டம் டிராவில் முடித்துகொள்ளப்பட்டது.

இதனால் இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. தொடர்ந்து நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்தியா கைப்பற்றி புதிய வரலாறும் படைத்துள்ளது. இந்த தொடரில் 25 விக்கெட்டுகள் மற்றும் 86 ரன்கள் விளாசிய அஸ்வின் , 135 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா ஆகியோர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டனர்.

"இந்திய மண்ணில்  அவர்களை மிஞ்சியர்கள் வேறு யாரும் இல்லை" -ரோஹித் புகழ்ந்த அந்த வீரர்கள் யார் தெரியுமா?

இந்த போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அணி கேப்டன் ரோஹித் சர்மாவிடம் அடுத்த முறை இந்தியாவில் நடக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில், 35 வயதை கடந்த ஜடேஜா,அஸ்வின் அணியில் இடம்பிடிப்பார்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, அவர்கள் அணியில் இருப்பார்களா என்பது எனக்கு தெரியாது. நானும் இருப்பேனா என்பதும் எனக்கு தெரியாது. நான்கு வருடங்கள் இருக்கின்றன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

ஆனால், இந்திய அணிக்கு அவர்கள் இருவரின் செயல்பாடு கண்டிப்பாக தேவை. இந்த வயதிலும் முக்கியமான கட்டத்தில் ரன்களை அடித்துக் கொடுக்கிறார்கள், பார்ட்னர்ஷிப்பை உடைக்கிறார்கள், அதோடு தொடர் நாயகன் விருதையும் பெற்றிருக்கிறார்கள். இதனை வைத்து இந்திய கண்டிசன்களில் அவர்களுக்கு மிஞ்சிய வீரர்கள் வேறு எவரும் இல்லை என்பதை தெரிந்துகொள்ளலாம். இதனை வைத்து இன்னும் சில ஆண்டுகள் அவர்கள் அணியில் நீடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories