தமிழ்நாடு

மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!

வேலூரில் உள்ள செங்கல் சூளையில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேலூர் மாவட்டம், கணியம்பாடி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், தினகரன், சுனில்குமார், ரமேஷ், சுமன் ஆகிய ஐந்து பேரும் அதே கிராமத்தில் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கணியம்பாடி தவெக ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் ஆகிய மூன்று பேரும் சம்பந்தப்பட்ட செங்கல் சூளைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது, "நாங்கள்தான் ஆளுங்கட்சி; இனிமேல் கணியம்பாடி பகுதிகளில் செங்கல் சூளை நடத்த வேண்டுமென்றால் எங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டும்" என்று அவர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனை எதிர்த்துக் கேள்வி கேட்டபோது, உரிமையாளர்கள் ஐந்து பேரையும் கடும் சொற்களால் திட்டி, தவெக நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் அச்சமடைந்த செங்கல் சூளை உரிமையாளர்கள், இது குறித்து வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories