விளையாட்டு

உலகில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட டிக்கெட்.. Messi-Ronaldo மோதலுக்கு இத்தனை மதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி!

மெஸ்ஸி -ரொனால்டோ மோதும் போட்டிக்கான டிக்கெட் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட டிக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது.

உலகில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட டிக்கெட்.. Messi-Ronaldo மோதலுக்கு இத்தனை மதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த நட்சத்திர வீரர் போர்த்துக்கல் அணி இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அந்த போட்டியில் ரொனால்டோ கண்ணீரோடு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ரொனால்டோவால் அல் நாசர் அணி பங்கேற்கும் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாது என்ற தகவல் வெளிவந்துள்ளது. அல் நாசர் அணியில் இணையும் முன்னர் ரொனால்டோ இங்கிலாந்தில் கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடினார்.

உலகில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட டிக்கெட்.. Messi-Ronaldo மோதலுக்கு இத்தனை மதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி!

அப்போது எவர்ட்டன் அணிக்கு எதிரான போட்டியின் போது அவரோடு புகைப்படம் எடுக்கவந்த ஆட்டிசம் குறைபாடு கொண்டு சிறுவன் ஒருவரின் கைப்பேசியை ரொனால்டோ தட்டி விட்டதால் இங்கிலாந்து கால்பந்து சம்மேளனத்தால் இரண்டு போட்டிகளில் ரொனால்டோ விளையாடக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக இனி அல் நாசர் அணிக்காக தனது முதல் போட்டியை ஜனவரி 21 அன்று தான் விளையாட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் அவர் தனது முதல் போட்டியிலேயே அவரின் நீண்ட நாள் போட்டியாளரான மெஸ்ஸியை எதிர்த்து விளையாடுவார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட டிக்கெட்.. Messi-Ronaldo மோதலுக்கு இத்தனை மதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி!

அர்ஜெண்டின கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி ’பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்’ என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணி அடுத்த வாரம் சவூதி அரேபியாவுக்கு சென்று அங்கு ரொனால்டோவின் அல் நாசர் அணிக்கு எதிராக நட்பு போட்டி ஒன்றில் ஆடவுள்ளது. இந்த போட்டியில் PSG அணிக்காக மெஸ்ஸியும், அல் நாசர் அணிக்காக ரொனால்டோவும் எதிர் எதிராக களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரண்டு வீரர்களும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக நேருக்கு நேர் எதிர்கொள்ளவுள்ள நிலையில், இந்த போட்டியை காண இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டிக்கெட் வாங்க ஆர்வமாய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த போட்டிக்காக ஏலம் விடப்பட்ட டிக்கெட் ஒன்று இந்திய மதிப்பில் இந்தப் போட்டியை நேரில் காண்பதற்கான கௌரவ டிக்கெட் ஒன்று, ஏலம் விடப்பது.

உலகில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட டிக்கெட்.. Messi-Ronaldo மோதலுக்கு இத்தனை மதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி!

நேற்றோடு இந்த ஏலம் முடிவடைந்த நிலையில், ‘அக்கார்ஒன்’ எனும் நிறுவனத்தின் பொது மேலாளர் முஷ்ரஃப் அல் கம்தி 2.2 மில்லியன் பவுண்ட் ( இந்திய மதிப்பில் சுமார் 25 கோடி ) இந்த டிக்கெட்டை ஏலத்தில் வாங்கியுள்ளார். இதன் மூலம் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட டிக்கெட் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. ஏலத்தில் வென்ற அல் கம்தி, போட்டி முடிந்தபின் நடைபெறும் வெற்றிவிழாவில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படுவதோடு மெஸ்ஸி, ரொனால்டோ ஆகிய வீரர்களை சந்திக்கும் வாய்ப்பை பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories