விளையாட்டு

ரொனால்டோவை விட அதிக சம்பளம்.. மெஸ்ஸியை வாங்க விரும்பும் ரொனால்டோவின் போட்டி கிளப்.. பின்னணி என்ன ?

ரொனால்டோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அல் நாசர் அணியின் பரம போட்டியாளரான அல் ஹிலால் அணி மெஸ்ஸியை வாங்க முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ரொனால்டோவை விட அதிக சம்பளம்.. மெஸ்ஸியை வாங்க விரும்பும் ரொனால்டோவின் போட்டி கிளப்.. பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த நட்சத்திர வீரர் போர்த்துக்கல் அணி இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அந்த போட்டியில் ரொனால்டோ கண்ணீரோடு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ரொனால்டோவால் அல் நாசர் அணி பங்கேற்கும் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாது என்ற தகவல் வெளிவந்துள்ளது. அல் நாசர் அணியில் இணையும் முன்னர் ரொனால்டோ இங்கிலாந்தில் கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடினார்.

ரொனால்டோவை விட அதிக சம்பளம்.. மெஸ்ஸியை வாங்க விரும்பும் ரொனால்டோவின் போட்டி கிளப்.. பின்னணி என்ன ?

அப்போது எவர்ட்டன் அணிக்கு எதிரான போட்டியின் போது அவரோடு புகைப்படம் எடுக்கவந்த ஆட்டிசம் குறைபாடு கொண்டு சிறுவன் ஒருவரின் கைப்பேசியை ரொனால்டோ தட்டி விட்டதால் இங்கிலாந்து கால்பந்து சம்மேளனத்தால் இரண்டு போட்டிகளில் ரொனால்டோ விளையாடக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக இனி அல் நாசர் அணிக்காக தனது முதல் போட்டியை ஜனவரி 21 அன்று தான் விளையாட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் அவர் தனது முதல் போட்டியிலேயே அவரின் நீண்ட நாள் போட்டியாளரான மெஸ்ஸியை எதிர்த்து விளையாடுவார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ரொனால்டோவை விட அதிக சம்பளம்.. மெஸ்ஸியை வாங்க விரும்பும் ரொனால்டோவின் போட்டி கிளப்.. பின்னணி என்ன ?

அர்ஜெண்டின கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி ’பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்’ என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். இவரின் இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டோடு முடிவுக்கு வரும் நிலையில், அடுத்து அவர் PSG அணிக்காக தொடர்ந்து விளையாடுவாரா அல்லது வேறு கிளப்க்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மெஸ்ஸி தனது முன்னாள் கிளப்பான பார்சிலோனாவுக்கு அவர் செல்வார் என்று சொல்லப்பட்டாலும் வேறு சில அணிகளும் அவரை ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரொனால்டோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அல் நாசர் அணியின் பரம போட்டியாளரான அல் ஹிலால் அணி மெஸ்ஸியை வாங்க முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ரொனால்டோவை விட அதிக சம்பளம்.. மெஸ்ஸியை வாங்க விரும்பும் ரொனால்டோவின் போட்டி கிளப்.. பின்னணி என்ன ?

இதற்காக ரொனால்டோவுக்கு அல் நாசர் அணி கொடுத்துள்ள தொகையை விட அதிக தொகையை கொடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த செய்தி உண்மையானது அல்ல என்றும், மெஸ்ஸி இன்னும் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் நிலையில், ஐரோப்பாவின் முன்னணி கால்பந்து கிளப்கள் அவரை இன்னும் தொடர்பு கொண்டு வரும் இந்த சூழலில் அவர் ஆசியாவில் விளையாட முன்வர மாட்டார் என முன்னணி செய்தியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories