விளையாட்டு

உலகக்கோப்பை தோல்வியைத் தொடர்ந்து ஓய்வு பெறப்போகிறாரா நெய்மர் ? உருக்கமாக பேட்டியால் ரசிகர்கள் அதிர்ச்சி !

பிரேசில் நட்சத்திரம் நெய்மர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரா என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

உலகக்கோப்பை தோல்வியைத் தொடர்ந்து ஓய்வு பெறப்போகிறாரா நெய்மர் ? உருக்கமாக பேட்டியால் ரசிகர்கள் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காலிறுதி போட்டியில் பலம்வாய்ந்த பிரேசில் -குரோஷியா ஆகிய அணிகள் மோதின.இந்த போட்டியில் பிரேசில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குரோஷியா அணி மிக சிறப்பான தடுப்பாட்டத்தின் ஈடுபட்டு பிரேசில் அணிக்கு ஈடுகொடுத்தது. அதேநேரம் வலுவான பிரேசில் அணியின் முன்கள வீரர்கள் தொடர்ந்து குரோஷியா கோல் போஸ்டை முற்றுகையிட்டு கொண்டே இருந்தனர்.

ஆனால், குரோஷிய அணியின் கோல் கீப்பர் சுபாசிக்கை தாண்டி பிரேசில் வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. பிரேசில் வீரர்கள் வினிசியஸ், நெய்மார் ஆகியோர் அடுத்தடுத்த ஷாட்களை கோலாகாமல் தடுத்து சுபாசிக் ஆட்டத்தில் பட்டையை கிளப்பினார். இதன் காரணமாக 90 நிமிடங்கள் முடிந்த நிலையில் இரு அணிகளிலும் கோல் அடிக்க முடியவில்லை.

உலகக்கோப்பை தோல்வியைத் தொடர்ந்து ஓய்வு பெறப்போகிறாரா நெய்மர் ? உருக்கமாக பேட்டியால் ரசிகர்கள் அதிர்ச்சி !

பின்னர், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் 105-வது நிமிடத்தில் நெய்மார் ஒரு அட்டகாசமான கோல் அடித்து பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இந்த கோல் மூலம் பிரேசில் ஜாம்பவான் பீலே சர்வதேச போட்டிகளால் பிரேசில் அணிக்காக அடித்த 77வது கோல் என்ற எண்ணிக்கையை சமன் செய்தார்.

ஆனால், அவரின் இந்த கொண்டாட்டம் அடுத்த 15 நிமிடத்தில் அழுகையாக மாறியது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஆட்டம் முடிய 4 நிமிடங்களே இருந்த நிலையில் குரோஷியா அணி பதில் கோல் அடிக்க ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்க்கு சென்றது. இதில் பிரேசில் வீரர் ரோட்ரிகோ முதல் வாய்ப்பை தவற விட்ட நிலையில், குரோஷியா அடுத்தடுத்து 4 வாய்ப்புகளை கோலாக்கியது.

உலகக்கோப்பை தோல்வியைத் தொடர்ந்து ஓய்வு பெறப்போகிறாரா நெய்மர் ? உருக்கமாக பேட்டியால் ரசிகர்கள் அதிர்ச்சி !

இறுதியில் பிரேசில் வீரர் மார்கினோஸ் தனது வாய்ப்பில் கோல் அடிப்பதை தவறவிட அதோடு பிரேசில் அணியின் உலகக்கோப்பை கனவும் முடிவுக்கு வந்தது. 4-2 என கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்திய குரோஷியா அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த போட்டிக்கு பின்னர் நெய்மர் களத்திலேயே அழுதது மைதானத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அப்போது வெற்றிபெற்ற குரோஷியா அணியின் நட்சத்திர வீரர் இவான் பெரிசிஸின் மகன் களத்துக்குள் வந்து நெய்மரை தேற்றினார். இந்த காட்சி அரங்கத்தில் இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

உலகக்கோப்பை தோல்வியைத் தொடர்ந்து ஓய்வு பெறப்போகிறாரா நெய்மர் ? உருக்கமாக பேட்டியால் ரசிகர்கள் அதிர்ச்சி !

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நெய்மர், "நான் தேசிய அணிக்காக மீண்டும் விளையாடுவதற்கான கதவுகளை மூடவில்லை. அதேவேளையில் அணிக்கு மீண்டும் திரும்புவேன் என்பதற்கு 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்கவில்லை. எனக்கும் தேசிய அணிக்கும் எது சரியானது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்" என்று கூறினார்.

இதன் காரணமாக அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பல்வேறு ரசிகர்களும் நெய்மர் தொடர்ந்து பிரேசில் அணிக்காக ஆடவேண்டும் என வலியுறுத்திவரும் நிலையில், அவரின் முடிவு என்ன என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

banner

Related Stories

Related Stories