விளையாட்டு

"இனிமேல் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது": ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்!

வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பதால் என்னால் இனிமேல் கிரிக்கெட் விளையாட முடியாது என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

"இனிமேல் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது":  ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஐ.பி,எல் 2023 தொடருக்கு மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியோடு இணையப்போவதாகத் தெரிவித்திருக்கிறார் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ். ஆனால், அவர் வீரராக இணையப்போவது இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஓராண்டுக்கு முன்பு அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற டி வில்லியர்ஸ், வீரராக இணையவில்லை என்றாலும் அந்த அணியோடு நிச்சயம் ஏதோவொரு வகையில் இணைவதாகக் கூறியிருக்கிறார் அவர்.

சமீபத்தில் கண் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருக்கும் டி வில்லியர்ஸ் இனி விளையாடவே போவதில்லை என்றும் குறிபிட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மீண்டும் சின்னசாமி ஸ்டேடியத்துக்குத் திரும்பும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்வதற்குத் தன்னுடைய ஆதரவைத் தரப்போவதாகக் கூறியிருக்கிறார் அவர்.

"இனிமேல் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது":  ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்!

"அடுத்த ஆண்டு நான் சின்னசாமி ஸ்டேடியத்துக்கு செல்லப் போகிறேன். ஆனால் கிரிக்கெட் விளையாடுவதற்காக அல்ல. ஐபிஎல் கோப்பை வெல்லாததற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கோறப் போகிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக அவர்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றியும் தெரிவிக்க வேண்டும். என்னால் இதற்கு மேல் கிரிக்கெட் விளையாட முடியாது. ஏனெனில் என்னுடைய வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறேன்" என்று சமூக வலைதள உரையாடலின்போது குறிப்பிட்டிருக்கிறார் மிஸ்டர் 360.

தான் அடுத்து தொடங்கப்போகும் யூ டியூப் சேனல் பற்றி அறிவித்த டி வில்லியர்ஸ், தன்னுடைய எதிர்கால திட்டங்கள் உள்பட பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். இந்த உரையாடலின்போது இப்போதைக்குத் தான் பயிற்சியாளர் ஆகும் எண்ணம் இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். தன்னுடைய மகத்தான கிரிக்கெட் கரியருக்கு முற்றுப் புள்ளி வைத்த டி வில்லியர்ஸ் தற்போதைக்கு தன் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதே தன்னுடைய பிரதானம் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு அணியின் பயிற்சியாளர் ஆனால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதால் அந்த எண்ணம் இப்போது இல்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

"இனிமேல் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது":  ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்!

"நான் நிச்சயமாக ஒரு அணியைப் பயிற்சி செய்யும் திட்டத்தில் இல்லை. நான் கற்றுக்கொண்ட அனைத்து விஷயங்களுமே பகிர்ந்துகொள்ள நான் நிச்சயம் விரும்புகிறேன். ஆனால் அதற்கான நேரம் வரும். ஆனால் இப்போதைக்கு நான் எந்த அணியோடும் இணையத் தயாராக இல்லை. பயிற்சியாளரானால் மீண்டும் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் மீண்டும் பயணம் மேற்கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் பல பயணங்கள் மேற்கொண்டுவிட்ட நான் இப்போதைக்கு சில காலம் என் குடும்பத்தோடு என் நேரத்தை செலவளிக்க நினைக்கிறேன்" என்று தெரிவித்தார் டி வில்லியர்ஸ்.

தற்போது இந்தியாவில் நடந்து வரும் லெஜண்ட்ஸ் லீக் தொடரில் விளையாட தனக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்த டி வில்லியர்ஸ், கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் அந்த அழைப்பை நிராகரித்ததாகக் கூறீனார். பல முன்னாள் ஜாம்பவான்கள் விளையாடிக்கொண்டிருக்கும் இந்தத் தொடரில் விளையாட தனக்கு ஆசை இருந்திருந்தாலும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார் அவர். "எனக்கு மிகவும் வயதாகிவிட்டது. லெஜன்ஸ் லீக் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. என்னையும் அழைத்தார்கள். ஆனால் இப்போது தான் எனக்கு கண்ணில் அறுவை சிகிச்சை நடந்தது. என்னால் ஒற்றைக் கண்ணில் விளையாட முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் அந்த ரிஸ்க்கை எடுக்கமாட்டேன்" என்று கூறினார் டி வில்லியர்ஸ்.

banner

Related Stories

Related Stories