விளையாட்டு

”இவரைப் போல ஒரு வீரர் பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் தேவை” - இந்திய வீரரை புகழ்ந்த ஷாஹித் அப்ரிடி !

பாகிஸ்தான் அணிக்கு ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு வீரர் வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார்.

”இவரைப் போல ஒரு வீரர் பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் தேவை” - இந்திய வீரரை புகழ்ந்த ஷாஹித் அப்ரிடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய அணியின் அதிமுக்கியமான விரராக உருவெடுத்திருக்கிறார் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. டி20, ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடும் அவர் இந்திய அணியின் நம்பத்தகுந்த ஃபினிஷராகவும் மாறியிருக்கிறார். நெருக்கடி இல்லாமல் முதலில் பேட்டிங் செய்வதாகட்டும் இல்லை மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மிகப்பெரிய இலக்குகளை சேஸ் செய்வதாகட்டும் தன்னுடைய அசத்தலான பேட்டிங்கால் அனைத்து சூழ்நிலைகளையும் சமாளித்துவருகிறார் ஹர்திக்.

சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 71 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார் அவர். இந்திய அணி வெற்றி பெற 2 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்றிருந்த போது எந்த சலனமும் இல்லாமல் பௌண்டரி அடித்தார் அவர். ஹர்திக் பாண்டியாவின் இந்த சிறப்பான பேட்டிங் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடியை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.

”இவரைப் போல ஒரு வீரர் பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் தேவை” - இந்திய வீரரை புகழ்ந்த ஷாஹித் அப்ரிடி !
INDRANIL MUKHERJEE

ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு சிறப்பான ஃபினிஷர் பாகிஸ்தான் அணியில் இல்லை என்பதை ஒத்துக்கொண்டிருக்கிறார் அப்ரிடி. "நமக்கு ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு வீரர் வேண்டும். லோயர் மிடில் ஆர்டரில் ஆடக்கூடிய, கடைசி நேரத்தில் வந்து ஆட்டத்தை சிறப்பாக முடித்துக் கொடுக்கக்கூடிய, ஒருசில சிறப்பான ஓவர்களை வீசக்கூடிய, நம்பத்தகுந்த ஒரு வீரர் பாகிஸ்தான் அணிக்குத் தேவை. பாகிஸ்தான் அணியில் ஏதாவதொரு பேட்ஸ்மேன் ஆட்டத்தை முடிக்கக் கூடிய பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா" என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது அப்ரிடியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார் பாகிஸ்தானைச் சேர்ந்த நிகழ்ச்சித் தொகுப்பாளரான சவேரா பாஷா.

"நீங்கள் சொல்வது சரிதான். ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு ஃபினிஷர் நம்மிடம் இல்லை. ஆசிஃப் அலி, குஷ்தில் ஷா போன்றவர்கள் அந்த வேலையை செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர்களால் முடியவில்லை. நவாஸும் சீராக விளையாடுவதில்லை. ஷதாப் கான் கூட அப்படித்தான். இந்த நான்கு வீரர்களில் குறைந்தபட்சம் இருவராவது சீராக விளையாடியாகவேண்டும். ஷதாப் கானின் பந்துவீச்சும் மிகவும் முக்கியமானது. அவர் சிறப்பாக பந்துவீசும் போட்டியில் பாகிஸ்தான் நிச்சயம் வெற்றி பெறும்" என்று பதில் கூறினார் அப்ரிடி.

”இவரைப் போல ஒரு வீரர் பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் தேவை” - இந்திய வீரரை புகழ்ந்த ஷாஹித் அப்ரிடி !

2022 டி20 உலகக் கோப்பைத் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பையை வெல்லவேண்டுமானால் பாகிஸ்தான் அணி தங்கள் பேட்டிங்கிலும் பௌலிங்கிலும் இருக்கும் பிரச்னைகளை சரிசெய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார் அப்ரிடி.

"நாம் இப்போது விளையாடிக்கொண்டிருக்கும் வகையான ஆடுகளங்களில் இரண்டு வேகப்பந்துவீச்சாளரும் ஒரு ஆல் ரவுண்டரும் நிச்சயம் தேவைப்படும். புதிதாக ஜமால் என்று ஒரு வீரரை எடுத்திருக்கிறார்கள். அவரை ஏன் விளையாடவைக்கக் கூடாது? அவர் என்ன மாதிரியான வீரர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பாகிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என்று கனவு கண்டால், அவர்கள் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் பெரிய முன்னேற்றம் கான வேண்டும். இதுவரை செய்துவரும் தவறுகளை சரிசெய்யவேண்டும்" என்று கூறியிருக்கிறார் அப்ரிடி.

banner

Related Stories

Related Stories