விளையாட்டு

கேப்டன் விராட் கோலியை கடுப்பாக்கிய கேரள ரசிகர்கள் - காரணம் என்ன?

இந்திய ரசிகர்கள் செய்த செயல் விராட் கோலியை கோபமடைய செய்தது.

கேப்டன் விராட் கோலியை கடுப்பாக்கிய கேரள ரசிகர்கள் - காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

திருவனந்தபுரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த போட்டிக்கு பின் பேசிய விராட் கோலி, போட்டியில் அதிக கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டதால், தோல்விக்குத் தள்ளப்பட்டதாகவும், இப்படி மோசமாக ஃபீல்டிங் செய்ததால் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது என்று காட்டமாக கூறினார். நேற்றைய போட்டியில் இந்திய ரசிகர்கள் செய்த செயல் விராட் கோலியை கோபமடைய செய்தது.

புவனேஸ்வர் குமார் வீசிய ஐந்தாவது ஓவரில் லீவிஸ் கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பை ரிஷப் பன்ட் நழுவவிட்டார். அப்போது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ரிஷப் பன்ட்டை நோக்கி தோனி, தோனி என கூச்சலிட்டனர்.

இதனைக் கண்டு கோபமடைந்த விராட் கோலி ரசிகர்களிடம் தனது அதிருப்தியை வெளிபடுத்தினர். மேலும், இதுபோன்று தேவையில்லாமல் கூச்சலிட வேண்டமென்று ரசிகர்களை நோக்கி கூறினார்.

கேப்டன் விராட் கோலியை கடுப்பாக்கிய கேரள ரசிகர்கள் - காரணம் என்ன?

இந்த ஆட்டதிற்கு முன்னதாகவே பண்ட் தவறு செய்தால் தோனி, தோனி என்று கூச்சலிட வேண்டாமென்று கோலி கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நேற்றைய போட்டியில் கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் இடம்பெறுவார் எனக் கேரள ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர் அணியில் இடம்பெறவில்லை. இதனால் மைதானத்தில் சஞ்சு சாம்சன் பெயரையும் சொல்லி ரசிகர்கள் கூச்சலிட்டனர்.

banner

Related Stories

Related Stories