விளையாட்டு

தோனியின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு விராட் கோலி அளித்த அசத்தல் பதில்! - ரசிகர்கள் கொண்டாட்டம்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி, தோனியின் எதிர்காலம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்தார்.

தோனியின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு விராட் கோலி அளித்த அசத்தல் பதில்! - ரசிகர்கள் கொண்டாட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து ஃபாலோ ஆன் அடிப்படையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அந்த அணி, அதிலும் 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன்மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ரோஹித் சர்மா ஆட்டநாயகனாகவும், தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

தோனியின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு விராட் கோலி அளித்த அசத்தல் பதில்! - ரசிகர்கள் கொண்டாட்டம்!

போட்டியைக் காண வந்த தோனி, போட்டி முடிந்த பிறகு வீரர்கள் தங்கும் அறைக்கு வந்து வீரர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும், தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், அருமையான வெற்றிக்குப் பின் இந்தியாவின் உண்மையான ஜாம்பவானை அவரது இடத்திலேயே பார்த்தது மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.

ஆட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் கோலியிடம், தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, "தோனி ஓய்வு அறையில் தான் உள்ளார். வந்து அவருக்கு ஹலோ சொல்லுங்கள்'' எனக் கூறினார்.

முன்னதாக தோனியிடம் அவரது ஓய்வு குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் கூலாக பதில் அளித்ததை ரசிகர்கள் இதனுடன் ஒப்பிட்டு இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories