விளையாட்டு

உலகக்கோப்பை தோல்வி எதிரொலி : இந்திய அணியிலிருந்து கல்தா கொடுக்கப்படும் முக்கிய புள்ளி !

உலகக்கோப்பை தொடரில் இந்தியா அணிக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

உலகக்கோப்பை தோல்வி எதிரொலி : இந்திய அணியிலிருந்து கல்தா கொடுக்கப்படும் முக்கிய புள்ளி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ரன்னில் ஆட்டமிழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

உலகக்கோப்பை தோல்வி எதிரொலி : இந்திய அணியிலிருந்து கல்தா கொடுக்கப்படும் முக்கிய புள்ளி !

தற்போது இருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் உலகக்கோப்பை தொடருடன் முடிந்தது. அதன்படி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் நீட்டிக்க வாய்ப்புள்ளது. இந்த உலகக் கோப்பை தொடர் முழுக்க இந்திய அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங்கும் மிக சிறப்பாக இருந்தது.

உலகக்கோப்பை தோல்வி எதிரொலி : இந்திய அணியிலிருந்து கல்தா கொடுக்கப்படும் முக்கிய புள்ளி !

ஆனால் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் சரியாக செயல்படவில்லை. இவரின் பயிற்சிக்கு கீழ் இந்திய பேட்டிங் சரியாக செயல்படவில்லை. 4ம் இடத்திற்கு சரியான வீரரை தேர்ந்தெடுக்க வில்லை என பல குற்றசாட்டுகள் உள்ளது. இதனால் சஞ்சய் பங்கர் பதவியை பி.சி.சி.ஐ நீட்டிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். சஞ்சய் பங்கர் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories