
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில், தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள், முடிவு செய்து வேட்டபாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (மார்ச் 28) திமுக வேட்பாளர்களை அறிவித்தார் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தொடர்ந்து மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தது.

அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று (மார்ச் 30) தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு :-
1. கீழ்வேளூர் (தனி) - டி.லதா
2. கந்தர்வக்கோட்டை (தனி) - எம்.சின்னதுரை
3. பத்மநாபபுரம் - ஆர்.செல்லசுவாமி
4. பழனி - என்.பாண்டி
5. திருவொற்றியூர் - எல்.சுந்தரராஜன்






