அரசியல்

திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்த குடியரசுத் துணைத் தலைவர்... சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் !

குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் பாதியிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்த குடியரசுத் துணைத் தலைவர்... சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஜனதா கட்சி, காங்கிரஸ் என தனது அரசியல் பயணத்தை தொடங்கிய ஜெகதீப் தன்கர் கடந்த 2003-ம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். அங்கு பல்வேறு பதவிகளை வகித்த அவர். கடந்த 2019-ம் ஆண்டு மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அப்போது மாநில அரசுடன் பல்வேறு முரண்பாடுகளை சந்தித்த அவர் பின்னர் குடியரசுத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதோடு மாநிலங்களவை சபாநாயகராகவும் அவர் திகழ்ந்து வரும் நிலையில், மாநிலங்களவையில் தனது பதவியை மறந்து பாஜக அரசின் பிரதிநிதி போல அவர் செயல்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்த குடியரசுத் துணைத் தலைவர்... சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் !

இதனிடையே நேற்று இரவு உடல்நிலையை காரணம் காட்டி குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து பாதியிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "குடியரசு துணைத் தலைவர் தன்கரின் திடீர் ராஜினாமா அதிர்ச்சியளிக்கிறது. மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், மாலை 5 மணி வரை நானும் அவருடன் இருந்தேன்.

இரவு 7:30 மணிக்கு தொலைபேசியிலும் பேசினேன். உடல்நலத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது சரி தான். ஆனால் அவர் எதிர்பாராமல் ராஜினாமா செய்ததற்குப் பின்னால் இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன என்பது தெளிவாகிறது, அது இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இது ஊகிக்க வேண்டிய நேரம் அல்ல" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories