அரசியல்

“தடித்த தோலுக்கு ‘மன்னிப்பின்’ மகத்துவம் தெரியுமா?” - பழனிசாமியை வறுத்தெடுத்த முரசொலி கட்டுரை!

தடித்த தோலுக்கு ‘மன்­னிப்­பின்’ மகத்­து­வம் தெரி­யுமா? என்ற தலைப்பில் முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது.

“தடித்த தோலுக்கு ‘மன்னிப்பின்’ மகத்துவம் தெரியுமா?” - பழனிசாமியை வறுத்தெடுத்த முரசொலி கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

“திருப்புவனம் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் 'கொலை' வழக்கில் கைதாகி இருக்கிறார்கள். மரணம் அடைந்த அஜீத்குமாரின் தாயிடம், தம்பியிடம் மாநிலத்தின் முதலமைச்சர் வருத்தம் தெரிவித்துப் பேசியது என்பது மக்களாட்சியின் மாண்பு ஆகும். இதெல்லாம் தடிதோல்களால் உணர முடியாது.” என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து முரசொலியில் வெளியான கட்டுரை வருமாறு :

திருப்புவனத்தில் காவலர்கள் சிலர் கொடூர மாக நடந்து கொண்டார்கள். இதில் அஜீத்குமார் என்பவர் பலியானார். குற்றச் சம்பவத்தை மறைக்கவோ, யாரையும் காப்பாற்றவோ அரசு முயற்சிக்கவில்லை.

கொடூரமாக நடந்து கொண்ட காவலர்கள் 5பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்கள். டி.எஸ்.பி. பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். எஸ்.பி. மாற்றப்பட்டு இருக்கிறார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றினார் முதலமைச்சர் அவர்கள். 'அரசின் உடனடி நடவடிக்கைகள் ஏற்கத்தக்கது' என்று சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளை நடத்திய விசாரணையின்போது நீதியரசர் அவர்களே பாராட்டும் தெரிவித்தார்கள்.

யாரும் கோரிக்கை வைப்பதற்கு முன் இந்தவழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள். 'மடியில் கனமில்லை' என்பதாக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு அமைந்தது.

மரணம் அடைந்த அஜீத்குமார் வீட்டுக்கு அமைச்சர் பெரியகருப்பனை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் அவர்கள். அஜித்குமாரின் அம்மாவுக்கும், தம்பிக்கும் ஆறுதல் கூறினார் அமைச்சர். அப்போது அமைச்சரைத் தொடர்பு கொண்ட முதலமைச்சர் அவர்கள், அஜீத்குமாரின் அம்மாவிடமும் பேசினார். தம்பியிடமும் பேசினார்.

மனித மனத்தின் மாபெரும் மாண்பு, 'மன்னிப்பு' கேட்பது ஆகும். ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதை அறிந்த நிலையில் முதலமைச்சர் அவர்கள், 'நடந்ததுக்கு ஸாரிம்மா' என்று முதலமைச்சர் அவர்கள் தழுதழுக்கச் சொன்னார்கள். 'பணியுமாம் எந்தன் பெருமை' என்ற நிலையில் அமைந்திருந்தது முதலமைச்சரின் அந்தச் செயல்.

“தடித்த தோலுக்கு ‘மன்னிப்பின்’ மகத்துவம் தெரியுமா?” - பழனிசாமியை வறுத்தெடுத்த முரசொலி கட்டுரை!

“முதலமைச்சர் என்னிடம் ஆறுதல் கூறினார். 'எனக்கும் வருத்தமாகத் தான் இருக்கிறது. இந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறேன்' என்று முதலமைச்சர் கூறினார். அவர் பேசியது எங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது” என்று அஜீத்குமாரின் அம்மா பேட்டி அளித்திருக்கிறார். 'குற்றம் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது' என்று அஜீத்குமாரின் தம்பியிடம் முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். இது அந்தக் குடும்பத்துக்கு பெரிய ஆறுதலாக அமைந்துவிட்டது.

சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதும், அஜீத்குமார் குடும்பத்திடம் பேசியதும் முதலமைச்சரின் பாரபட்சமற்ற, உடனடி நீதியை உறுதி செய்தது.

இதை வைத்து அரசியல் செய்ய நினைத்த பழனிசாமியின் பிழைப்பில் உடனடியாக மண் விழுந்து விட்டது. சி.பி.ஐ. விசாரணை கேட்டு பிழைப்பை ஓட்டலாம், அந்த குடும்பத்துக்கு நீதிஎன்று சொல்லி மீதிக் காலத்தை ஓட்டலாம் என்றுநினைத்தார் பழனிசாமி. அது முடியாமல் போன அரிப்பில் அறிக்கை விட்டுள்ளார் பழனிசாமி. 'முதலமைச்சரின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம்' என்று இந்த தடித்தோல் பழனிசாமி சொல்லி இருக்கிறது.

13 பேரை தூத்துக்குடியில் சுடச் சொல்லிவிட்டு, 'நான் டி.வி.யைப் பார்த்துத் தான் தெரிஞ்சுக்கிட்டேன்' என்று பல்லைக் காட்டியபடி பேட்டி கொடுத்தாயே அது தான் ஆணவம்!
13 பேரை தூத்துக்குடியில் சுடச் சொல்லிவிட்டு, 'நான் டி.வி.யைப் பார்த்துத் தான் தெரிஞ்சுக்கிட்டேன்' என்று பல்லைக் காட்டியபடி பேட்டி கொடுத்தாயே அது தான் ஆணவம்!

13 பேரை தூத்துக்குடியில் சுடச் சொல்லிவிட்டு, 'நான் டி.வி.யைப் பார்த்துத் தான் தெரிஞ்சுக்கிட்டேன்' என்று பல்லைக் காட்டியபடி பேட்டி கொடுத்தாயே அது தான் ஆணவம்!

தூத்துக்குடி சம்பவம் பற்றி அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. பழனிசாமிக்குத் தெரிந்தே தான் அந்தக் கொலைகள் அரங்கேற்றப்பட்டதாக அந்த ஆணையமே சொல்லிஇருக்கிறது. அறிக்கையின் 2 ஆவது பாகம் - 219 ஆவது பக்கத்தில் இடம் பெற்றுள்ள 252 ஆவது கருத்து இது :

".....have been updating the Chief Minister Tr. Edapadi K. Palanisamy with minute to minute development

which took place in Thoothukudi and as such to say that the then Chief Minister come to know of the shooting only through the media would be incorrect or inaccurate - the Commission would opine” என்று சொல்லி இருக்கிறது அந்த அறிக்கை.

“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி அப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'அந்தச் சம்பவத்தை மற்றவர்களைப் போல ஊடகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்து கொண்டேன்' என்று பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

ஆனால் இந்த ஆணையத்திடம் மிக வலுவாக இருக்கும் ஆதாரம் என்னவென்றால், சாட்சியாக விசாரிக்கப்பட்ட அப்போதையதலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அப்போதைய டி.ஜி.பி. ராஜேந்திரன், அப்போதைய உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடி யில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள நிலவரங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து வந்ததாகக் கூறினார்கள்.

எனவே,ஊடகங்கள் மூலமாகத் தான் அந்தச் சம்பவம் பற்றி தெரிந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியது தவறான கருத்து என்பது இந்த ஆணையத்தின் கருத்தாகும்” – என்று ஆணையத்தின் அறிக்கை சொல்கிறது. இதற்குப் பிறகும் அறிக்கை அரசியல் செய்ய பழனிசாமிக்கு அவமானமாக இல்லையா?

சாத்தான்குளத்தில் தந்தையையும் மகனையும் காவல் நிலையத்தில் வைத்து கொன்று விட்டு, 'உடல் நலக் குறைவால் மரணம்' என்றுஅறிக்கை விட்டதுதான் ஆணவம்! கடையை மூடமறுத்ததால் காவலர்கள் தாக்கினார்கள் என்ற தொனியில் அறிக்கை விட்டது பழனிசாமிதான்.

‘பென்னிக்ஸ் மூச்சுத்திணறலால் இறந்தார், ஜெயராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்' என்றும் அறிக்கை வெளியிட்டார் அன்றைய முதலமைச்சர் பழனிசாமி. ‘சி.பி.ஐ. விசாரணை கேட்டு தி.மு.க. நீதிமன்றத்தை நாடும்' என்று தி.மு.க. தலைவர் அவர்கள் சொன்ன பிறகுதான், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார் பழனிசாமி. 'காவலர்கள் மீது கொலை வழக்காகப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது’ என்று சொன்னது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை.

சாத்தான்குளத்தில் தந்தையையும் மகனையும் காவல் நிலையத்தில் வைத்து கொன்று விட்டு, 'உடல் நலக் குறைவால் மரணம்' என்றுஅறிக்கை விட்டதுதான் அதிமுக
சாத்தான்குளத்தில் தந்தையையும் மகனையும் காவல் நிலையத்தில் வைத்து கொன்று விட்டு, 'உடல் நலக் குறைவால் மரணம்' என்றுஅறிக்கை விட்டதுதான் அதிமுக

உயர்நீதிமன்ற நீதியரசர்களால் வரலாற்றின்முதல் முறையாக சாத்தான்குளம் காவல்நிலையம், காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து எடுக்கப்பட்டு வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களால் விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டவர் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன். அவரை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்கள் மிரட்டினார்கள். 'உன்னால் ஒன்றும் ...... முடியாது' என்றுகாவலர் ஒருவர் மிரட்டியதாக மாஜிஸ்திரேட்டே நீதிமன்றப் பதிவாளரிடம் புகார் செய்தார்.

“...கடையை மூடச் சொன்ன எங்களை மிரட்டிய ஜெயராஜும், பென்னீக்ஸும் தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக்காயம் ஏற்பட்டது..” என்று முதல் தகவல் அறிக்கை எழுதியது பழனிசாமியின் போலீஸ்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் அ.தி.மு.க. அரசின் வழக்கறிஞர் இதனைப் பூசிமெழுகப் பார்த்தார். 'இது லாக்அப் மரணமே அல்ல' என்று அன்றைய அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்னார்.

கண்ணால் பார்த்ததை வாக்குமூலமாகக்கொடுத்த தலைமைக் காவலர் ரேவதி மிரட்டப்பட்டார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில்இருந்த சி.சி.டி.வி. காட்சிகள் அழிக்கப்பட்டன. ஆதாரங்கள் மறைக்கப்பட்டன. இவ்வளவும் ஆட்சி மேலிடத்தின் உதவி இல்லாமல், உயர்காவல்துறை அதிகாரிகளின் தயவு இல்லாமல் சாதாரண காவலர்களால் செய்திருக்க முடியாது. ஊடகங்களில் ஏராளமான வீடியோ ஆதாரங்கள் வெளியான பிறகு சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு பழனிசாமி நெருக்கடிக்குள்ளானார்.

சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் தனது கடமையைத் தவறியுள்ளார் என்றும், முறையாக அவர் பரிசோதனை செய்யவில்லை என்றும் சி.பி.ஐ. விசாரணை சொல்கிறது. சாத்தான்குளம் அரசு மருத்துவமனை தொடக்கப் பதிவேடுகள், அடுத்தடுத்த மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள், கோவில்பட்டி சிறையில் அடைத்தபோது எழுதப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றுக்குள் முரண்பாடுகள் இருப்பதாகவும் சி.பி.ஐ. சொன்னது. இதுதான் பழனிசாமி ஆட்சியின் லட்சணம் ஆகும். இப்படிப்பட்ட பழனிசாமி, இன்று அறிக்கை அரசியல்நடத்திக் கொண்டிருக்கிறார்.

திருப்புவனம் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் 'கொலை' வழக்கில் கைதாகி இருக்கிறார்கள். மரணம் அடைந்த அஜீத்குமாரின் தாயிடம், தம்பியிடம் மாநிலத்தின் முதலமைச்சர் வருத்தம் தெரிவித்துப் பேசியது என்பது மக்களாட்சியின் மாண்பு ஆகும். இதெல்லாம் தடிதோல்களால் உணர முடியாது.

banner

Related Stories

Related Stories