அரசியல்

பாஜகவுக்கு பாதிப்பென்றால் குறுக்கே விழுந்து மடைமாற்றம் செய்யும் பழனிசாமி -அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

பாஜகவுக்கு பாதிப்பென்றால் குறுக்கே விழுந்து மடைமாற்றம் செய்யும் பழனிசாமி -அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள காலத்தில் பொய் என்பது தீ போல் பரவுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வதந்தியை வேகமாக பரப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எனினும் இதுபோன்ற போலி விஷயங்களை முறியடித்து, மக்களாட்சியில் முன்னிலையில் இருக்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.

இதுபோன்ற போலி செய்திகளை பரப்புவதில் பாஜக முன்னிலை வகித்த நிலையில், தற்போது அதனை பின்னுக்கு தள்ளி, முன்னேற துடிக்கிறது அதிமுக. எடப்பாடி பழனிசாமி உண்மையை அறியாமல், பொய்யை மட்டுமே நம்பி பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கிறார். எவ்வளவுதான் திமுக பதிலடி கொடுத்தாலும், அவதூறு பரப்புவதில் மட்டுமே பழனிசாமி முனைப்புக் காட்டி வருகிறார்.

பாஜகவுக்கு பாதிப்பென்றால் குறுக்கே விழுந்து மடைமாற்றம் செய்யும் பழனிசாமி -அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

அந்த வகையில் தற்போது மேலும் ஒரு அவதூறை பரப்பியுள்ளார். அதாவது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (MGNREGA) உள்ள 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்குமாறும், மீண்டும் அவர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்குமாறும் திமுக அரசை வலியுறுத்துவதாக அவதூறாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆதாரத்துடன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

ஒன்றிய பாஜக அரசிற்கு ஒரு பாதிப்பென்றால் ஓடிவந்து குறுக்கே விழுந்து அதை மடைமாற்றம் செய்வதே எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி அவர்களின் கடமை என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார்.

பாஜகவுக்கு பாதிப்பென்றால் குறுக்கே விழுந்து மடைமாற்றம் செய்யும் பழனிசாமி -அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

100 நாள் வேலைத் திட்டம் என்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இந்த நயவஞ்சக செயலை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உடனடியாக தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய MGNREGS நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திப் பொங்கலுக்கு முன்பே 13.01.2025 அன்று பிரதமருக்குக் கடிதம் எழுதி இருந்தார். இதை ஆதரித்து தமிழ்நாட்டு மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டிய பழனிசாமி , தனது குரலை அவதூறு பரப்ப மட்டுமே பயன்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது.

ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருக்க வேண்டுமல்லவா? எதற்கெடுத்தாலும் செய்தித்தாளிலே படித்தேன், டிவியைப் பார்த்து தெரிந்து கொண்டேன் எனக் கூறும் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒன்றிய பாஜக அரசு நமக்கு நிதி ஒதுக்காதது பற்றித் தெரியாதா?

புயல் வெள்ள நிவாரணம், கல்வி நிதி , 100 நாள் வேலைக்கான நிதி ஆகியவற்றை ஒதுக்காமல் தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைத்துவரும் பாஜக அரசோடு மறைமுகக் கூட்டணி வைத்துக் கொண்டு , ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது பேச முடியாமல் வாய் மூடி இருப்பது ஏன்? தனது இயலாமையை மறைக்கவே மக்களின் நலனில் அக்கறை கொண்டு அனுதினமும் செயல்பட்டுவரும் திராவிட மாடல் ஆட்சியின் மீது அவதூறு பரப்புவதையே அவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories