அரசியல்

1.50 லட்சம் ராணுவ வீரர்களுக்கு பணி ஆணை வழங்காத ஒன்றிய பாஜக அரசு : காங்கிரஸ் போராட்டம் !

அக்னிபாத் திட்டத்தால் 1 லட்சத்து 50 ஆயிரம் ராணுவ வீரர்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது.

1.50 லட்சம் ராணுவ வீரர்களுக்கு பணி ஆணை வழங்காத ஒன்றிய பாஜக அரசு : காங்கிரஸ் போராட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த வருடம் மாதம் ஒன்றிய அரசு ராணுவத்தில் குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் 'அக்னிபாத்' திட்டத்தை அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கும் பரவி போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் இரயில்களுக்கு தீவைத்த தங்கள் எதிர்ப்புகளை காட்டினர்.

மேலும் பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்து பேசிய பா.ஜ.க. தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களை சூரையாடி தீ வைத்ததால் பெரும் வன்முறைகாடாக அப்பகுதிகள் காட்சி அளித்தது. இதில் பல சேதாரங்கள் ஏற்பட்டது.தெலுங்கானாவில் இந்த திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது ரயில்வே போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கட்சிகளான தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இந்த திட்டம் தொடர்பாக பேசிய பா.ஜ.க தலைவர்கள், அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு ராணுவப் பணி முடிந்த பிறகு பா.ஜ.க அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலை கொடுக்கப்படும் என கூறினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

1.50 லட்சம் ராணுவ வீரர்களுக்கு பணி ஆணை வழங்காத ஒன்றிய பாஜக அரசு : காங்கிரஸ் போராட்டம் !

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேர்ந்த முதல் ராணுவ வீரர் உயிரிழந்த நிலையில், அவருக்கு ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்தால் 1 லட்சத்து 50 ஆயிரம் ராணுவ வீரர்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது.

அக்னிபாத் திட்டம் அறிவிக்கப்படும் முன்னர் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் தகுதி தேர்விலும் வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அதன்பின்னர் அக்னிபாத் திட்டம் அறிவிக்கப்பட்டு அதில், தேர்வானவர்களுக்கே ராணுவத்தில் பணி வழங்கப்பட்டது. மேலும்,ஏற்கனவே ராணுவத்துக்கு தேர்வான 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories