அரசியல்

ஒன்றிய அரசு வேலைவாய்ப்பிலும் மெகா மோசடித்தனம்.. பாஜக அரசின் அடுத்த அவலம்.. தினகரன் நாளேடு விமர்சனம் !

ஒன்றிய அரசு வேலைவாய்ப்பிலும் மெகா மோசடித்தனம்.. பாஜக அரசின் அடுத்த அவலம்..  தினகரன் நாளேடு விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5.50 லட்­சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்­த­தாக ஒன்­றிய பா.ஜ.க. அரசு அறி­வித்­த­தை­ய­டுத்து, அதி­லும் ஒன்­றிய அரசு மெகா மோச­டித்­த­னம் செய்­துள்ள செய்தி கூட விரை­வில் வர­லாம் என்று தின­க­ரன் நாளேடு தலை­யங்­கம் எழு­தி­யுள்­ளது.

அது­வ­ரு­மாறு :-–

2022 அக்­டோ­பர் முதல் இப்­போது வரை 5.50 லட்­சம் பேருக்கு வேலை வழங்கி விட்­ட­தாக முழங்­கி­யி­ருக்­கி­றது மோடி அரசு. இந்த ஆண்டு இறு­திக்­குள் 10 லட்­சம் பேருக்கு வேலை வழங்­கப்­ப­டும் என்று உறுதி அளித்து இருக்­கி­றார்­கள். ஆண்­டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்­கப்­ப­டும் என்ற வாக்­கு­றுதி தற்­போது 10 லட்­சம் அள­வுக்கு சுருங்­கிப்­போய் இருப்­பது பிர­த­மர் மோடி­யின் ஆகச்­சி­றந்த நிர்வாகம் தான். ஆனால் இப்­போது வேலை­வாய்ப்பு வழங்­கி­யி­ருப்­ப­தாக கூறப்­பட்டு இருக்­கும் 5.50 லட்­சம் பேரை­யும் எப்­படி தேர்வு செய்­தார்­கள், எந்த தேதி­க­ளில் தேர்­வு­கள் நடத்தப்பட்டது என்று ஆராய்ந்­தால் இன்­னும் ஒரு மெகா மோசடி வெளியே வரும் போல் தோன்­று­கி­றது.

ஒன்­றிய அர­சின் இந்த வேலை வழங்­கும் திட்டம் ரோஜ்­கார் மேளா என்று அழைக்­கப்­ப­டு­கி­றது. எல்­லைப் பாது­காப்பு படை, சிஏ­பி­எப், சிஆர்பி எப், சிஐ­எஸ்­எப், எஸ்­எஸ்பி, ஐடி­பிபி உள்­ளிட்ட ஒன்­றிய உள்­துறை அமைச்­ச­கம் கட்­டுப்­பாட்­டில் இருக்­கும் பல்­வேறு காவல் பணி­க­ளி­லும், ஒன்­றிய அர­சின் பல்­வேறு துறை­க­ளி­லும் இந்த 5.50 லட்­சம் பேருக்­கும் வேலை வழங்­கி­யி­ருப்­ப­தாக அறி­விப்பு வெளியிட்டு இருக்­கி­றது.

ஒன்­றிய அமைச்­சர் பி.எல். வர்மா கூறு­கை­யில், ‘இது­வரை 5.50 லட்­சம் பேருக்கு வேலை வழங்கி விட்­டோம். இந்த ஆண்டு டிசம்­பர் மாதத்­திற்­குள் 10 லட்­சம் பேருக்கு வேலை வழங்கி விடு­வோம்’ என்­கி­றார். அதி­லும் குறிப்­பாக ஒன்­றிய உள்­துறை அமைச்சகத்தின் கட்­டுப்­பாட்­டில் உள்ள காவல் அமைப்­பு­க­ளில் காலி­யாக இருந்த 1 லட்­சம் பணியிடங்­க­ளில் இது­வரை 87 ஆயி­ரம் பணி­யி­டங்­கள் கடந்த அக்­டோ­பர் முதல் இப்­போது வரை நிரப்பி விட்­ட­தாக கணக்கு காட்­டப்­பட்டு இருக்­கி­றது. டிசம்­பர் மாதத்திற்கு இன்­னும் 3 மாதங்­கள் உள்ள நிலை­யில் அதற்­குள் 4.50 லட்­சம் பணி­யி­டங்­கள் நிரப்ப வேண்­டும். எப்­படி நிரப்ப முடி­யும்?. கடந்த ஆண்டு அக்­டோ­பர் முதல் இந்த மாதம் வரை 5.50 லட்­சம் பேருக்கு எப்­படி வேலை வழங்கி இருக்க முடி­யும்? அதை எப்­படி வழங்­கி­னார்­கள் என்­பது தான் இன்று எழுந்­துள்ள கேள்வி.

ஒன்றிய அரசு வேலைவாய்ப்பிலும் மெகா மோசடித்தனம்.. பாஜக அரசின் அடுத்த அவலம்..  தினகரன் நாளேடு விமர்சனம் !

5.50 லட்­சம் பேரை தேர்வு செய்ய ஒன்­றிய அரசு தேர்­வுக்­கான அறிவிப்பு வெளி­யிட வேண்­டும். விண்­ணப்­பம் பெற வேண்­டும். தேர்­வர்­க­ளுக்கு ஹால் டிக்­கெட் வழங்க வேண்­டும். தேர்வு மையங்­கள் தேர்வு செய்­யப்­பட்டு, விண்­ணப்­பித்த நபர்­களை வரவழைத்து தேர்வு நடத்­தப்­பட வேண்டும். அதன்­பின் நீ ஆன்­சர் வெளி­யிட்டு, தேர்வு முடி­வு­களை வெளி­யிட வேண்­டும். மோடி அரசு இந்த 11 மாதங்­க­ளில் நிரப்பி உள்­ள­தாக அறி­வித்துள்ள 5.50 லட்­சம் காலி­யி­டங்­க­ளுக்கு எப்­போது இந்த நடை­மு­றை­கள் பின்பற்றப்பட்டன ?எப்­போது தேர்வு அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டது? எத்­தனை பேர் விண்­ணப்­பம் செய்­தார்­கள், எத்­தனை பேர் எந்தெந்த தகுதி அடிப்­ப­டை­யில் நிய­ம­னம் செய் யப்­பட்­டார்­கள், தேர்வு செய்­யப்­பட்ட 5.50 லட்­சம் பேர் பட்­டி­யல் எங்கே என்றெல்லாம் கேள்வி எழுப்­பி­னால் சிஏஜி அறிக்­கை­யில் வெளியானது போஸ் வேலை வழங்­கு­வ­தி­லும் இந்த நாட்­டின் இளை­ஞர்­களை ஏமாற்­றிய மெகா மோச­டித்­த­னம் வெளியே வரலாம்.

இதில் மோடி அர­சின் கீழ் கடந்த 9 ஆண்­டுகளில் தக­வல் தொழில்­நுட்­பம், உற்­பத்தி, வர்த்­த­கம், போக்­கு­வ­ரத்து உள்­ளிட்ட 9 துறை­க­ளில் 1.50 கோடிக்­கும் அதி­க­மான வேலை­கள் உரு­வாக்கப்­பட்­டுள்­ளன என்று தக­வல் வெளி­யிட்­டுள்­ளார் ஒன்­றிய தொழி­லா­ளர், வேலை­வாய்ப்­புத் துறை அமைச்­சர் பூபேந்­தர் யாதவ். இப்­போது தேர்வான­வர்­கள் பட்­டி­யலே தெரி­யாத போது 2030ம் ஆண்­டில் சுற்­று­லாத்­து­றை­யில் மட்­டும் 14 கோடி வரை வேலை­வாய்ப்பு உரு­வா­கும் என்று ஆசை காட்­டி­யி­ருக்­கி­றார் நமது பிர­த­மர் மோடி.

இவ்­வாறு தின­க­ரன் நாளேடு தலை­யங்­கம் எழு­தி­யுள்­ளது.

banner

Related Stories

Related Stories