அரசியல்

மணிப்பூர் கொடூரம்.. ஒன்றிய அரசை கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்.. எங்கு, எப்போது? - முழு விவரம் !

தாய்மையை நிர்வாணப்படுத்தித் தலைகுனிய வைத்த மணிப்பூர் தடுக்கத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் வரும் 23-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

மணிப்பூர் கொடூரம்.. ஒன்றிய அரசை கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்.. எங்கு, எப்போது? - முழு விவரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தாய்மையை நிர்வாணப்படுத்தித் தலைகுனிய வைத்த மணிப்பூர் தடுக்கத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் வரும் 23-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து மகளிரணி சார்பாக வெளியிட்ட அறிக்கையில், "பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய நிலையில், சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட, மனிதாபிமானமற்ற கொடுமை நிகழ்ந்ததாக, ஊடகச் செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்துள்ளது.

தாய்மையை அவமானப்படுத்தும் இந்நிகழ்வுகளை மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசு தடுக்கத் தவறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இக்கலவரங்கள் நிகழ்ந்த நேரத்தில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வந்தார். ஒன்றிய பா.ஜ.க. அரசும் மகளிருக்கெதிரான இக்கொடுமைகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியது.

மணிப்பூர் கொடூரம்.. ஒன்றிய அரசை கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்.. எங்கு, எப்போது? - முழு விவரம் !

மணிப்பூர் கலவரம் தொடங்கிய நேரத்திலேயே தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான தளபதி அவர்கள், தனது கண்டனத்தையும், கவலையையும் சமூக ஊடக வாயிலாக வெளிப்படுத்தினார்.

இச்சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான நெஞ்சைப் பதற வைக்கும் இக்கொடுமையைக் கண்டித்து, வரும் 23.07.2023 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாலை 4 மணியளவில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மணிப்பூர் கொடூரம்.. ஒன்றிய அரசை கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்.. எங்கு, எப்போது? - முழு விவரம் !

தொடர்ச்சியாக 24.07.2023 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். மாவட்டக் கழகச் செயலாளர்கள், மகளிர் அணி அமைப்பாளர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டங்களை சிறப்பாக நடத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மெய்தெய் - குக்கி சமூகங்களுக்கு இடையே கலவரம் தொடர்ந்து வரும் நிலையில், குக்கி பழங்குடியின பெண்கள் 2 பேர் நிர்வாணமாக சாலையில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துக்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories