அரசியல்

புகாரளித்த வீராங்கனையை பிரிஜ் பூஷன் வீட்டுக்கு அழைத்து சென்ற டெல்லி போலிஸ்.. நெட்டிசன்கள் கண்டனம்!

மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத்தை போலிஸார் நடந்த நிகழ்வுகளை மீண்டும் நடித்துக் காட்டச் சொல்லி பிரிஜ் பூஷன் வீட்டிற்கு டெல்லி போலீஸ் அழைத்துச் சென்றுள்ளது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புகாரளித்த வீராங்கனையை பிரிஜ் பூஷன் வீட்டுக்கு அழைத்து சென்ற டெல்லி போலிஸ்.. நெட்டிசன்கள் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தை வீராங்கனைகள் தற்காலிகமாகத் திரும்பப்பெற்றனர்.பின்னர் விசாரணைக் குழு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புகாரளித்த வீராங்கனையை பிரிஜ் பூஷன் வீட்டுக்கு அழைத்து சென்ற டெல்லி போலிஸ்.. நெட்டிசன்கள் கண்டனம்!

இதற்கிடையில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ந்து ஒரு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி கொடுக்காமல் இருந்து வருகிறது.

அதன்பின்னர் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற திறக்கப்பட்ட நிலையில், அதனை அதனை முற்றுகையிட்டு மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கிருந்த போலிஸார் மல்யுத்த வீரர்களை தடுத்து தரதரவென இழுத்து சென்று கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புகாரளித்த வீராங்கனையை பிரிஜ் பூஷன் வீட்டுக்கு அழைத்து சென்ற டெல்லி போலிஸ்.. நெட்டிசன்கள் கண்டனம்!

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நாட்டுக்காக தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் தூக்கி வீசுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர். ஆனால் மல்யுத்த வீரர்களுடன் போராட்டம் நடத்திய விவசாய சங்க தலைவர்களும் அவர்களின் இந்த முடிவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்ததால் பதக்கங்களை ஆற்றில் வீசும் போராட்டத்தை மல்யுத்த வீரர்கள் கைவிட்டு பிரிஜ்பூஷனை 5 நாட்களில் கைது செய்யவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என மல்லியுத்த வீராங்கனைகள் கெடு விதித்தனர்.

ஆனால், ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இதனிடையே பிரிஜ் பூஷன் மீது புகார் அளித்த மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத்தை போலிஸார் நடந்த நிகழ்வுகளை மீண்டும் நடித்துக் காட்டச் சொல்லி பிரிஜ் பூஷன் வீட்டிற்கு டெல்லி போலீஸ் அழைத்துச் சென்றுள்ளது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புகாரளித்த வீராங்கனையை பிரிஜ் பூஷன் வீட்டுக்கு அழைத்து சென்ற டெல்லி போலிஸ்.. நெட்டிசன்கள் கண்டனம்!

டெல்லி போலீசின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே எழுதியுள்ள கடிதத்தில் "மீண்டும் நடித்துக் காட்டச் சொல்வதற்கு இது ஒரு கொலை குற்றச் சம்பவம் இல்லை. அதுபோன்ற நிழ்வுகளுக்குத் தான் இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

பாலியல் சீண்டலை எப்படிச் செய்தார் என்பதை மீண்டும் விவரித்துக் காட்டச் சொல்லிய இந்த நடவடிக்கையின் மூலம், டெல்லி காவல்துறை சங்கீதா போகத்தின் மனதில் அவருக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் அதிர்ச்சியை மீள்உருவாக்கம் செய்துள்ளது. இது பாலியல் துன்புறுத்தலினால் பாதிக்கப்பட்ட அவரின் அடிப்படை உரிமைகளை மீறும் ஒரு செயலாகும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories