அரசியல்

“சாம்பார் கணக்குலாம் தேர்தல் மனுவிலேயே இருக்குது.. பில் இருக்குதா?” -அண்ணமாலையை கலாய்த்த செந்தில் பாலாஜி!

அண்ணாமலையின் ரபேல் வாட்ச் சர்ச்சைக்குறித்து மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

“சாம்பார் கணக்குலாம் தேர்தல் மனுவிலேயே இருக்குது.. பில் இருக்குதா?” -அண்ணமாலையை கலாய்த்த செந்தில் பாலாஜி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச் குறித்து இணையத்தில் ஒரு செய்தி பரவியது. அதாவது அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச்சின் விலை சுமார் 5 லட்ச ரூபாய் என்றும், அது ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி சர்ச்சைக்குள்ளான நிலையில், இது குறித்து நேற்று கோவையில் செய்தியாளர் சந்திப்பின் போது அண்ணாமலையிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், தான் ஒரு தேசியவாதி என்றும், அதனாலே ரபேல் வாட்ச்சை வாங்கியதாகவும் கூறினார்.

கோப்பு படம்
கோப்பு படம்

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா ரபேல் விமானங்களை ஆர்டர் செய்தது நம் அனைவருக்கும் தெரியும். அப்போது அந்த ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்ச்சுகளை செய்தார்கள். இது சிறப்புப் பதிப்பு என்பதால் ரபேல் விமானத்தில் உள்ள சில பாகங்கள் இந்த வாட்ச்சில் உள்ளது.

நான் ஒரு தேசியவாதி, பிரிவினைவாதி இல்லை. எனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் பாக்கியம்தான் கிடைக்கவில்லை. அதனால்தான் ரபேல் விமானத்திற்கு இணையாக இருக்கும் இந்த வாட்சை வாங்கி பயன்படுத்தி வருகிறேன். உலகளவில் பார்த்தால் இதில் 500 வாட்ச்சுகள்தான் தயாரிக்கப்பட்டது. அதில், நான் கட்டியிருக்கும் வாட்ச் 149-ஆவதாகும்.

“சாம்பார் கணக்குலாம் தேர்தல் மனுவிலேயே இருக்குது.. பில் இருக்குதா?” -அண்ணமாலையை கலாய்த்த செந்தில் பாலாஜி!

ரபேல் விமானம் நம்மிடம் வந்த பிறகு தான் போர் யுக்திகள் மாறியுள்ளன. இதன் காரணமாகவே சீனா நம்மிடம் வாலாட்டுவதில்லை. நமது பலம் அதிகரித்துள்ளது. எனது உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் நிச்சயம் எனது உடலில் இருக்கும். ரபேல் நிறுவனத்தின் வாட்ச்சுகளை ஒரு இந்தியன் தான் வாங்குவான். இது எனது தனிப்பட்ட விவகாரம். நான் எனக்குப் பிடித்ததைச் செய்கிறேன்" என்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தன்னிடம் இருக்கும் சொத்து என்று கூறும் அண்ணாமலைக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பிலான வாட்ச் வாங்கும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

“சாம்பார் கணக்குலாம் தேர்தல் மனுவிலேயே இருக்குது.. பில் இருக்குதா?” -அண்ணமாலையை கலாய்த்த செந்தில் பாலாஜி!

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட பதிவில், "பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம்.

வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா?" என்று குறிப்பிட்டு கேடு விதித்து கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.

நான் பாஜக தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் , எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.

அன்றைய தினம் நான் பத்திரிகையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன். நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் அண்ணாமலையின் பதிலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.

வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான். பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா?

தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த 5 லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?" என்று மீண்டும் கேள்வியெழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories