அரசியல்

“இதனை கூட்டணி கட்சியான அதிமுகவிடமே கேட்டிருக்கலாம்” - ராமதாஸுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி!

அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“இதனை  கூட்டணி கட்சியான அதிமுகவிடமே கேட்டிருக்கலாம்” - ராமதாஸுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மின் தடை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சிக்கும் வகையில் தவறாக சித்தரித்து பதிவிட்டிருந்தது தற்போது கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.

மேலும் ராமதாஸின் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜியும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை - அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன - என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன்.

அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் ராமதாஸ், தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம்! அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்; தேடிப் படித்திருக்கலாம்!

பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது. களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள். எந்தச் சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரிதன்று! திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம்!” என உரிய படத்துடன் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories