அரசியல்

“இஸ்லாமியர்களை தனிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம்” - ‘தேசம் காப்போம்’ பேரணியில் திருமாவளவன் பேச்சு!

இந்து மதத்தின் மீது மிகுந்த பற்றுகொண்ட காந்தியையே நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றார் எனில் rss எம்மாதிரியான இயக்கம் என்பதை உணரவேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

“இஸ்லாமியர்களை தனிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம்” - ‘தேசம் காப்போம்’ பேரணியில் திருமாவளவன் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இஸ்லாமியர்களை தனிமை படுத்த, விடுதலை சிறுத்தைகள் விடாது என்று திருச்சியில் நடைபெற்ற பிரமாண்ட ‘தேசம் காப்போம்’ பேரணியில் திருமாவளவன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ‘தேசம் காப்போம்’ பேரணி நடைபெற்றது. அக்கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி, தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

“இஸ்லாமியர்களை தனிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம்” - ‘தேசம் காப்போம்’ பேரணியில் திருமாவளவன் பேச்சு!

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கையை கைவிட வேண்டும், தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இட ஒதுக்கீடு உரிமை பாதுகாத்திட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் பேரணியின் முடிவில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து மக்கள் முன்னிலையில் பேசிய திருமாவளவன், “நாங்கள் இஸ்லாமியர்கள் இல்லையென்றாலும், குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதற்கு காரணம், நாங்கள் ஜனநாயக சக்திகள். பா.ஜ.க அரசியல் கட்சி அல்ல. பா.ஜ.கவை இயக்குவது சங் பரிவார். இந்து மத கொள்கை மீது மிகுந்த பற்று கொண்ட காந்தியையே கோட்சே, சுட்டுக் கொன்றார் என்றால் ஆர்.எஸ்.எஸ் எந்த மாதிரியான இயக்கம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

“இஸ்லாமியர்களை தனிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம்” - ‘தேசம் காப்போம்’ பேரணியில் திருமாவளவன் பேச்சு!

ஆர்.எஸ்.எஸ்-க்கு பல அணிகள் உண்டு. அதில் ஒரு அரசியல் அணிதான் பா.ஜ.க. சங் பரிவாரின் வெறுப்பு, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதுதான். இஸ்லாமியர்களை தனிமைப்படுத்த நாங்கள் ஒருபோதும் விடமாட்டோம்.” என்று அவர் பேசினார்.

banner

Related Stories

Related Stories