முரசொலி தலையங்கம்

NewsClick முதன்மை ஆசிரியர் கைது.. மோடி அரசால் ஊடகங்களுக்கு விடப்பட்டுள்ள மிரட்டல்.. முரசொலி விமர்சனம் !

NewsClick முதன்மை ஆசிரியர் கைது.. மோடி அரசால் ஊடகங்களுக்கு விடப்பட்டுள்ள மிரட்டல்.. முரசொலி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (07-10-2023)

ஊட­கங்­க­ளுக்கு விடப்­பட்­டுள்ள மிரட்­டல்

சி.பி.ஐ. – வரு­மா­ன­வ­ரித் துறை – அம­லாக்­கத் துறை ஆகி­ய­வற்றை வைத்து எதிர்க்­கட்­சி­களை மிரட்­டும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு –- அடுத்து ஊட­கங்­க­ளை­யும் மிரட்டி வரு­கி­றது. ‘நியூஸ் கிளிக்’ முதன்மை ஆசி­ரி­யர் பிர­பீர் புர்­கா­யஸ்­தா­வும், அதன் மனி­த­வ­ளப் பிரி­வின் தலை­வர் அமித் சக்­ர­வர்த்­தி­யும் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்­கள். இந்த கைது நட­வ­டிக்கை என்­பது ஒட்­டு­மொத்­த­மாக ஊட­கங்­க­ளுக்கு விடப்­பட்­டுள்ள மிரட்­டல் ஆகும்.

பிர­பீர் புர்­கா­யஸ்தா –- அவ­சர நிலைக்­கா­லத்­தில் ( 1975) 18 மாதங்­கள் சிறை­யில் இருந்த போராளி ஆவார். இட­து­சா­ரிச் சிந்­தனை கொண்­ட­வர். அமித் சக்­ர­வர்த்தி –- ஒரு மாற்­றுத்­தி­ற­னாளி. இவர்­கள் இரு­வ­ரும்­தான் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்­கள்.டெல்­லி­யில் உள்ள நியூஸ் கிளிக் இணை­ய­தள செய்தி நிறு­வன அலு­வ­ல­கத்­தில் தீவிர சோதனை நடத்தி பூட்டி சீல் வைத்த டெல்லி காவல்­து­றை­யி­னர், இந்த கைது நட­வ­டிக்­கை­யை­யும் தொடர்ந்­துள்­ள­னர். என்ன குற்­றச்­சாட்டு அடிப்­ப­டை­யில் இந்த நட­வ­டிக்­கை­யைச் செய்­துள்­ளார்­கள் தெரி­யுமா? அமெ­ரிக்க நாளி­த­ழான ‘நியூ­யார்க் டைம்ஸ்’ ஒரு செய்­தியை வெளி­யி­டு­கி­றது. அதில், ‘நியூஸ் கிளிக் நிறு­வ­னம், சீனா­வி­ட­மி­ருந்து நிதி பெறு­கி­றது’ என்று குற்­றச்­சாட்டு சொல்லி இருந்­தார்­க­ளாம். இதை வைத்து இந்த கைது நட­வ­டிக்­கை­யாம்!

NewsClick முதன்மை ஆசிரியர் கைது.. மோடி அரசால் ஊடகங்களுக்கு விடப்பட்டுள்ள மிரட்டல்.. முரசொலி விமர்சனம் !

நியூஸ் கிளிக் ஊடக நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், “எங்­க­ளது இணை­ய­த­ளம் சுதந்­தி­ர­மா­னது. சீன நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து நிதி பெற்­றுக் கொண்டு செய்­தி­களை வெளி­யிட்­ட­தா­கக் கூறப்­ப­டும் புகார்­க­ளுக்கு எந்த அடிப்­ப­டை­யும் இல்லை. சீனா­வுக்­காக பிரச்­சா­ரம் செய்­யும் எந்த செய்­தி­யும் எங்­கள் இணை­ய­த­ளத்­தில் வெளி­யி­டப்­பட வில்லை. 2021ஆம் ஆண்டு முதல் நியூஸ் க்ளிக் நிறு­வ­னத்­தின் வங்­கிக் கணக்­கு­கள், வரவு- – செல­வு­கள், வெளி­நாட்­டுத் தொடர்­பு­கள் குறித்து ஒன்­றிய அர­சின் பல்­வேறு விசா­ரணை அமைப்­பு­கள் ஆய்வு நடத்தி உள்­ளன. இந்த ஆய்­வு­க­ளில் எந்த முறை­கே­டு­க­ளும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. நியூ­யார்க் டைம்ஸ் பத்­தி­ரி­கை­யில் உள்­நோக்­கத்­து­டன் வெளி­யான கட்­டு­ரையை மட்­டும் அடிப்­ப­டை­யா­கக் கொண்டு, எந்த ஆதா­ர­மும் இல்­லா­மல் ‘உபா’ போன்ற கடு­மை­யான சட்­டங்­க­ளின் கீழ் எப்­படி வழக்­குப் பதிவு செய்ய முடி­யும்?” என நியூஸ் கிளிக் கேள்வி எழுப்­பி­யுள்­ளது.

“சீன நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து பெரு­ம­ள­வில் நிதி பெற்ற ‘பி.எம்.கேர்ஸ்’ ஐ நிர்­வ­கிப்­ப­வர் மீது ஏன் ஒரு நட­வ­டிக்­கை­யும் இல்லை?” என உச்­ச­நீ­தி­மன்ற வழக்­க­றி­ஞர் பிர­சாந்த் பூஷன் கேள்வி எழுப்­பி­யுள்­ளார். “சீனாக்­கா­ரர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து கொஞ்­சம் நிதி வந்த ஒரே கார­ணத்­துக்­காக, நியூஸ் க்ளிக் மீது தேசத் துரோக வழக்கு. அந்த நிறு­வ­னத்­தோடு தொடர்பு கொண்­ட­வர்­க­ளின் வீடு­க­ளில் ரெய்டு, அவர்­க­ளின் செல்­பே­சி­க­ளும் லேப்­டாப்­க­ளும் பறி­மு­தல். ஆனால் சீன நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து பெரு­ம­ள­வில் நிதி பெற்ற PM CARES-–ஐ நிர்­வ­கிப்­ப­வர் மீது ஏன் ஒரு நட­வ­டிக்­கை­யும் இல்லை?” என கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

2021 ஆம் ஆண்டு இந்த நிறு­வ­னத்­தில் அம­லாக்­கத்­துறை சோதனை நடத்­தி­யது. இதன் முதன்மை ஆசி­ரி­யர் பிர­பீ­ருக்­குச் சொந்­த­மான வீட்டை முடக்­கி­யது. அவ­ரது நிரந்­தர வைப்­புத் தொகையை முடக்­கி­யது. பெரி­தாக ஆதா­ரம் இல்­லா­த­தால், நியூஸ் கிளிக் மற்­றும் அதன் உரி­மை­யா­ளர் மீது எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­யும் எடுக்­கக்­கூ­டாது என உச்­ச­நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. இதன் தொடர்ச்­சி­யாக இந்த இணைய ஊட­கத்­தைக் குற்­றம் சாட்டி ஒன்­றிய அமைச்­சரே நாடாளுமன்­றத்­தில் பேசி­னார். இதைத் தொடர்ந்து கடந்த அக்­டோ­பர் 3 அன்று சோதனை நடத்தி கைதும் செய்து விட்­டார்­கள். ‘நியூஸ் கிளிக்’ ஊடக ஊழி­யர்­கள் அனை­வ­ரும் விசா­ர­ணைக்கு உள்­ளாக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள். மூத்த பத்­தி­ரி­கை­யா­ளர் ஊர்­மி­ளேஷ், விசா­ர­ணைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டுள்­ளார். ராஜ்­ய­சபா டிவி­யின் முன்­னாள் ஆசி­ரி­யர் இவர்.

NewsClick முதன்மை ஆசிரியர் கைது.. மோடி அரசால் ஊடகங்களுக்கு விடப்பட்டுள்ள மிரட்டல்.. முரசொலி விமர்சனம் !

‘நியூஸ் கிளிக்’ என்­பது இட­து­சா­ரிச் சிந்­தனை கொண்ட ஊட­கம் ஆகும். பா.ஜ.க. அர­சின் போலி­யான முகத்தை தொடர்ந்து அம்­ப­லப்­ப­டுத்தி வந்­துள்­ளது. இது­வரை ஆங்­கி­லத்­தில் செய்­தி­களை வெளி­யிட்டு வந்­த­வர்­கள், சமீப கால­மாக இந்­தி­யில் செய்­தி­களை வெளி­யி­டத் தொடங்கி உள்­ளார்­கள். ‘இந்தி’ பேசும் மாநி­லங்­கள் விழிப்­பு­ணர்வு பெற்­று­வி­டக் கூடாது என்­ப­தில் பா.ஜ.க. எப்­போ­தும் தெளி­வாக இருக்­கும். அந்த மாநில மக்­களை இருட்­டில் வைத்து, வாக்கு வேட்­டை­யா­டும் கட்சி அது. எனவே, ‘இந்­தி’­யில் செய்தி வெளி­யி­டு­வ­தைத் தடுக்க நினைத்­துள்­ளார்­கள்.

‘இந்­தியா’ கூட்­டணி சார்­பில் வெளி­யி­டப்­பட்­டுள்ள கூட்­ட­றிக்­கை­யில், “மோடி தலை­மை­யி­லான ஒன்­றிய பா.ஜ.க. அரசு, கடந்த ஒன்­பது ஆண்­டு­க­ளில், பிபிசி, நியூஸ் லாண்ட்ரி, டைனிக் பாஸ்­கர், பாரத் சமாச்­சார், காஷ்­மீர் வாலா, தி வயர் போன்ற ஊட­கங்­களை ஒடுக்க புல­னாய்வு அமைப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­தி­யது. தற்­போது நியூஸ் கிளிக் செய்தி நிறு­வ­னத்தை ஒன்­றிய அரசு குறி­வைத்­துள்­ளது. மோடி அரசு ஊடக நிறு­வ­னங்­க­ளைக் கைய­கப்­ப­டுத்­து­வ­தன் மூலம் தங்­கள் கட்­சி­யின் கருத்­தி­ய­லுக்கு ஊட­கங்­களை ஊது­கு­ழ­லாக மாற்ற முயற்­சிக்­கி­றது.” என்று பகி­ரங்­க­மா­கக் குற்­றம் சாட்டி உள்­ளார்­கள்.

‘அழுத்­தத்­து­டன் பணி­பு­ரி­கி­றோம்’ –- என்று உச்­ச­நீ­தி­மன்ற தலைமை நீதி­ப­திக்கு, டிஜி­பப் நியூஸ் இந்­தியா ஃப்வுண்­டே­ஷன் (Digipub News India Foundation), இந்­தி­யன் வுமன்ஸ் பிரஸ் கார்ப்ஸ் (Indian Women’s Press Corps), பிரஸ் கிளப் ஆஃப் இந்­தியா (Press Club of India) உள்­ளிட்ட பல்­வேறு அமைப்­பு­கள் இணைந்து கடி­தத்தை எழு­தி­யுள்­ளன. “சட்­ட­வி­ரோ­தச் செயல்­கள் தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்ய, பத்­தி­ரி­கைப் பணி ஒன்­றும் தீவி­ர­வா­தப் பணி அல்ல. எனவே, பத்­தி­ரி­கைத்­து­றைக்கு ஏற்­பட்­டி­ருக்­கும் அச்­சு­றுத்­தல்­களை உச்­ச­நீ­தி­மன்­றம் தலை­யிட்டு தடுக்க வேண்­டும்” என அவை வலி­யு­றுத்தி உள்­ளன. “மக்­க­ளுக்கு நன்­மை­கள் எது­வும் செய்ய மாட்­டோம், இதை யாரா­வது குறை சொன்­னால் அவர்­களை விட­வும் மாட்­டோம்” -– இது­தான் பா.ஜ.க. பாணி ஆட்சி முறை­யா­கும். இவை அனைத்­துக்­கு­மான தண்­ட­னையை மக்­கள் நிச்­ச­யம் தரு­வார்­கள்.

banner

Related Stories

Related Stories