முரசொலி தலையங்கம்

இப்போதும் நச்சு சக்திகளுக்கு மிரட்சியாக இருக்கும் காந்தி.. ’வாழ்க நீ எம்மான்’: முரசொலி தலையங்கம்!

இனி யாரா­வது என்­னைச் சுட்­டால், உண்­மை­யான காந்­தி­யைக் கொல்ல முடி­யாது’ என்­றார் அடி­கள். உண்­மை­யான காந்தி வாழ்ந்து கொண்டே இருக்­கி­றார்.

இப்போதும் நச்சு சக்திகளுக்கு மிரட்சியாக இருக்கும் காந்தி.. ’வாழ்க நீ எம்மான்’: முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (04-10-2022)

மதவாத நச்சு சக்திகள் :

வாழ்க நீ எம்மான்!

அண்­ணல் காந்­தி­ய­டி­கள் மறைந்­த­போது - ‘தென்­னாட்­டுக் காந்தி’ என்று போற்­றப்­பட்ட பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் தனது ‘திராவிட நாடு’ இத­ழில் இப்­படி எழு­தி­னார்­கள்:

“முன்பு, ‘ இந்­தியா என்­றோர் நாடுண்டு, அங்கு ஏலம் கிராம்பு பெறு­ வ­துண்டு, பொன்னும் பொரு­ளும் மிக உண்டு, போக்கறியாதார் நிரம்ப உண்டு’ என்ற அள­வில் பதி­னா­றாம் நூற்றாண்­டிலே உல­கம் அறிந்­தி­ருந்­தது.

பிறகு படிப்­ப­டி­யாக இந்­தியா பிரிட்­டிஷ் பிடி­யில் சிக்­கி­விட்­டது. அப்­போது, ‘இந்­தியா என்­றோர் நாடுண்டு. அது ஆங்­கி­லே­ய­ருக்கு நல்ல வேட்­டைக்­காடு’ என்று உல­கம், இழித்­தும் பழித்­தும், பேசிக்கொண்­டது. தில­கர் காலத்­திலே விடி­வெள்­ளி­தோன்­று­வது போல, விடு­த­லைக்கு முயற்சி செய்­யப்­பட்­டது என்ற போதி­லும் காந்­தி­யார் காங்­கி­ர­சுக்­குள் புகுந்த பிறகே, ‘இந்­தியா என்­றோர் நாடுண்டு, அங்கு விழிப்­பும் எழுச்­சி­யும் உண்டு’ என்று உல­கம் அறிந்து கொள்ள முடிந்­தது.

இப்போதும் நச்சு சக்திகளுக்கு மிரட்சியாக இருக்கும் காந்தி.. ’வாழ்க நீ எம்மான்’: முரசொலி தலையங்கம்!

காந்­தி­யா­ரின் புக­ழொளி மூலமே உல­கம் இந்­தி­யா­வைக் கண்டுவந்­தது. தன்­ன­ல­மற்ற, விளைவு பற்­றிய கவ­லை­யற்ற, போராட்ட மனோ­பா­வத்தை நாட்­டிலே காந்­தி­யா­ரால்­தான் உண்டாக்க முடிந்­தது. அவ­ரு­டைய உரு­வமோ, உட­ல­மைப்போ, பேச்சோ, நடவ­டிக்­கையோ, ராணுவ மனப்­பான்­மையை ஏற்படுத்தக் கூடிய வித­மாக இல்லை ஆனால் அவ­ரால், ராணுவங்க­ளை­யும் எதிர்த்து நிற்­கக்­கூ­டிய வீர­உ­ணர்ச்­சியை இலட்சக்கணக்கான­வர்­க­ளுக்கு உண்­டாக்க முடிந்­தது. காந்தியாரின் புக­ழொ­ளியை அல்ல, அவரது உழைத்து அலுத்த உட­லைத் தான் வெறி­யன் சுட்டு வீழ்த்தி­னான்” - என்று கண்­ணீர் தமி­ழால் தூரிகை மூல­மாக துயரத்தை வடித்­தார் பேர­றி­ஞர் பெருந்­தகை அவர்­கள்.

அத்­த­கைய உத்­த­மர் காந்தி அடி­கள் பிறந்­த­நாள் அக்­டோ­பர் 2. தனக்கு இயற்கை மர­ணம் ஏற்­ப­டாது என்­பதை உணர்ந்தே வாழ்ந்தார் அவர். ‘இனி யாரா­வது என்­னைச் சுட்­டால் உண்மையான காந்­தி­யைக் கொல்ல முடி­யாது’ என்று சொல்லி வந்­த­வர் அவர்.

இந்­திய நாட்­டின் அர­சி­யல் விடு­தலை மட்­டுமே அவ­ரது இறுதி இலக்­காக இல்லை. பிரிட்­டி­ஷா­ரைத் துரத்­து­வது மட்­டுமே அவ­ரது நோக்கு. மத­வே­று­பா­டு­ கள், மாறு­பா­டு­கள் அற்ற இந்­தி­யர்­களை உரு­வாக்­கு­வது அவ­ரது நோக்­க­மாக இருந்­தது. அத­னால்­தான் இந்தியா விடு­தலை பெற்­ற­போது அதி­கா­ரம் பொருந்­திய டெல்லியில் இருக்­கா­மல், பிரி­வி­னை­யால் மக்­கள் மோதிக் கொண்ட

நவ­கா­ளி­யில் இருந்­தார் அவர். தனது காலத்­தில் இந்து – முஸ்­லிம் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்த முடி­ய­வில்­லையே என்­ப­து­தான் அவ­ரது வருத்­தம்.

இப்போதும் நச்சு சக்திகளுக்கு மிரட்சியாக இருக்கும் காந்தி.. ’வாழ்க நீ எம்மான்’: முரசொலி தலையங்கம்!

“எனது மர­ணம் நிக­ழும் போது எனது நினை­வி­டத்­தில், ‘ இவர் ஆகமட்­டும் முயன்­றார் - ஆனால் படு­தோல்­வியை அடைந்­தார்’ என்று எழு­துங்­கள்” என்று சொல்­லி­விட்­டுப் போனார் அண்­ணல். அவரை ‘அடி­கள்’ என்று முத­லில் எழு­தி­ய­வர் தமிழ்த்­தென்­றல் திரு.வி.க. அவர்­கள். அடி­கள் மறைந்­த­போது அவர் வெளி­யிட்ட அறிக்­கை­யில், ‘ காந்தி அடி­கள் தமது இலட்­சி­ய­மா­கக் கொண்டிருந்த இந்து - முஸ்­லிம் ஒற்­று­மையை நிலை­நாட்ட உறுதி கொள்­வோ­மாக’ என்று எழு­தி­னார்.

அத்­த­கைய இந்து - முஸ்­லிம் ஒற்­று­மையை, இந்­திய ஒற்­று­மையை, இந்­திய ஒரு­மைப்­பாட்டு ஒற்­று­மையை சிதைக்­கும் காரி­யங்­களை சில நச்சு சக்­தி­கள் நாளும் செய்து வரு­கின்­றன. இந்­திய அள­வில் பா.ஜ.க., ஆட்சி அமைத்த பிறகு இத்­த­கைய சக்­தி­கள் அதி­க­மான ஆட்­டத்­தைப் போட்டு வரு­கின்­றன. இந்­தியா முழு­மைக்­கு­மான ஒற்­று­மை­யின் அடை­யா­ள­மாக இருக்­கின்ற காந்­தி­யின் புக­ழைச் சிதைப்­ப­தன் மூல­மாக இந்­தி­யத்­தின் பன்­மைத் தன்­மையை சிதைக்க முயற்­சிக்­கி­றார்­கள். காந்­தி­யின் பிறந்­த­நாளை ‘சுவச்ச பாரத் அபி­யான்’ என மாற்­றி­ய­தில் இருக்­கி­றது இவர்­க­ளது அழித்தல் வேலை­கள். இது காந்­தி­யின் அனைத்து அடையாளங்களை­யும் அழித்­தல் ஆகும். அதே போன்ற காரியத்தை தான் அக்­டோ­பர் 2 ஆம் நாள் ஊர்­வ­லம் நடத்­து­வ­தன் மூல­மாக ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு திசை திருப்­பப் பார்த்­தது. அதனை தமிழ்­நாடு அரசு அனு­ம­திக்­க­வில்லை.

‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பார்த்து தி.மு.க. அரசு பயப்­ப­டு­கி­றது’ என்று சில ஜென்­மங்­கள் சொல்­லித் திரி­கி­றது. ஆர்.எஸ்.எஸை பார்த்து பா.ஜ.க. தான் பயப்­பட வேண்­டும். ‘ஒரே ஒரு நப­ரால் இந்தி­யா­வைக் காப்­பாற்றமுடி­யாது’ என்று மோடிக்கு எதி­ராக தொடர்ந்து பேசி வரு­ப­வர் மோகன் பக­வத் தான். மற்­ற­வர்­கள் பயப்­பட எது­வு­மில்லை.

ஒன்­றிய அரசு ‘பாப்­பு­லர் பிரண்ட் ஆப் இந்­தியா’ உள்­ளிட்ட சில அமைப்­பு­க­ளைத் தடை செய்­துள்ள கொந்­த­ளிப்­பான நேரம் இது. இதன் மூல­மாக விரும்­பத்­த­காத நிகழ்­வு­கள் நடந்­துள்­ளன. இது பா.ஜ.க. உள்­ளிட்ட அவர்­க­ளைப் போன்ற அமைப்­பு­கள் மத்­தி­யில் பதற்­றத்தை உரு­வாக்கி இருந்­தது. நாட்­டில் பதற்­ற­மான சூழ்­நிலை நில­வு­வ­தாக, ‘தின­ம­லர்’ நாளேடு செப்­டம்­பர் 29 அன்று பெட்­டிச் செய்­தியை வெளி­யிட்­டுள்­ளது. ‘ஆர்.எஸ்.எஸ். நிர்­வா­கி­கள் வீட்­டில் இருக்­கும் போதும், வெளி­யில் செல்­லும் போதும் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டும்’ என்று சுற்­ற­றிக்கை அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக ‘தின­ம­லர்’ செய்தி சொல்­கி­றது. தனது கட்­சிக்­கா­ரர்­க­ளுக்கு அண்ணா­மலை அனுப்­பிய வாட்ஸ் அப் செய்­தி­யி­லும் இது இருக்கிறது. ‘யாரும் வெளி­யில் செல்ல வேண்­டாம்’ என்று அதில் இருக்­கி­றது. இப்­படி பதற்­ற­மான காலத்­தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஊர்­வ­லம் நடத்த எப்­படி அனு­மதி தர முடி­யும்? அதுவும் காந்தி பிறந்­த­நா­ளி­லேயே?

இப்போதும் நச்சு சக்திகளுக்கு மிரட்சியாக இருக்கும் காந்தி.. ’வாழ்க நீ எம்மான்’: முரசொலி தலையங்கம்!

சட்­டம் ஒழுங்கு – பிரச்­சினை மட்­டு­மல்ல இது, ஆர்.எஸ்.எஸ். அமைப்­பின் நோக்­கம் தவ­றா­னது என்று தமிழ்­நாடு காவல் துறை சார்­பில் வாதா­டிய மூத்த வழக்­க­றி­ஞர் என்.ஆர்.இளங்கோ அவர்கள் உயர்­நீ­தி­மன்­றத்­தில் சொன்­னார்­கள். ‘’ காந்­திக்­கும் உங்க­ளுக்­கும் என்ன சம்­பந்­தம்? ‘ என்று கேட்­டார் அவர். ஏனென்றால், காந்­தி­யார் படு­கொ­லை­யைத் தொடந்து ( 1948) தடை செய்­யப் ­பட்ட அமைப்­பும் அது. ‘தாங்­கள் சொல்­லிக் கொள்வ­தைப் போல நடந்து கொள்­ளா த­வர்­கள்’ என்று தடையாணை­யி­லேயே பேர் வாங்­கிய அமைப்பு இது.

ஜோதி­ராவ் பூலே, சாகு மகா­ராஜ் போன்­றோ­ரால் தலித், பிற்படுத்தப்­பட்­டோர் எழுச்­சி­யா­னது மராட்­டி­யத்­தில் தோன்­றிய போது இந்து, முஸ்­லீம் ஒற்­று­மைக்­கான கிலா­பத் முயற்­சி­கள் காந்தி­யால் உரு­வானபோது அத­னைத் தடுப்­ப­தற்­காக உருவாக்கப்­பட்ட அமைப்­பு­தான் அது. கூட்­டுத் தேசிய ஒற்­றுமைகளுக்கு எதி­ரான வெறுப்­பு­ணர்வை விதைப்­பது அதனுடைய நோக்­கம் ஆகும்.

அத­னால்­தான் இவர்­க­ளுக்கு மர­ணத்­துக்­குப் பிற­கும் காந்­தி­யார் மிரட்­சியை ஏற்­ப­டுத்தி வரு­கி­றார்.

‘இனி யாரா­வது என்­னைச் சுட்­டால், உண்­மை­யான காந்­தி­யைக் கொல்ல முடி­யாது’ என்­றார் அடி­கள். உண்­மை­யான காந்தி வாழ்ந்து கொண்டே இருக்­கி­றார்.

வாழ்க நீ எம்­மான்!

banner

Related Stories

Related Stories