முரசொலி தலையங்கம்

புதிய திட்டம், பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகுமா? - முரசொலி தலையங்கம் 

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் என்றொரு திட்டம் இப்போது புதிதாக புறப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருமானால் இந்தியாவின் விவசாயப் பெருமக்கள், கூலித் தொழிலாளிகள், பால் உற்பத்தி விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள் என ‘பலகோடி மக்களின் வாழ்வும் பாதிப்புக்குள்ளாகி இந்தியப் பொருளாதாரம் சிதையத் தொடங்கிவிடும்’ என இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்து வருவதை முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.

சரிந்துவரும் பொருளாதாரம், வளர்ந்துவரும் வேலைவாய்ப்பின்மை என ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளில் நாடு சிக்குண்டுள்ளது. இந்நிலையில் வளர்ச்சிக்குப் புதிய தடம் போடுவதாகக் கூறி, புதிய தடையை உருவாக்கிவிடக்கூடாது. எல்லாவற்றையும் கருதிப்பார்த்து, ஒப்பந்தத்தை புறக்கணிப்பதாக எடுத்துள்ள முடிவில் இந்தியா உறுதியாக நிற்குமா? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

banner