மு.க.ஸ்டாலின்

கோவையில் 13 முத்தான புதிய திட்டங்கள் என்னென்ன ?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

கோயம்புத்தூரில் 13 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கோவையில் 13 முத்தான புதிய திட்டங்கள் என்னென்ன ?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.1237.51 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர், ஈரோடு திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர், ஈரோடு திருப்பூர், நீலகிரி ஆகிய ஒவ்வொரு மாவட்டத்துக்கும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கோயம்புத்தூரில் 13 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அவை பின்வருமாறு :

* தென்னை வேர் வாடல் நோய் பாதிப்பு அதிகம் உள்ள மரங்களைவெட்டி அகற்றுவதற்காக ரூ.14 கோடியே 4 இலட்சம் நிதி வழங்கப்படும்.

* 3 இலட்சம் தென்னங்கன்றுகள், ரூ.2 கோடியே 80 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்குஇலவசமாக வழங்கப்படும்.

* அகில இந்திய அளவில் 157 ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் மூலமாக பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யவும் வங்கி கணக்கில் அப்பணத்தை வரவு வைக்கவும் நடவடிக்கை

* கூட்டுறவு சங்கம் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விற்பனை.

கோவையில் 13 முத்தான புதிய திட்டங்கள் என்னென்ன ?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

* விலாமரத்தூர் சாலை முதல் அத்திக்கடவு அணை வரை 8.29 கி.மீ நீளத்தில், ரூ.9 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்படும்.

* வார்டு எண் 11 மூங்கில் மடை குட்டை பழங்குடியினர்வசிக்கும் பகுதியில் ரூ.57 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் மற்றும் வடிகால் அமைக்கப்படும்.

* மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மாவுத்தம்தி ஊராட்சிக்குட்பட்ட வாளையார் வனப்பகுதியில் தரை மட்ட குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும்.

* காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைக்கப்படும்.

* இக்கரை பூளுவாம்பட்டி ஊராட்சி, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், சோமையம் பாளையம்ஊராட்சி, மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் திவான்சாபுதூர் ஊராட்சி மற்றும் மாவுத்தம்தி ஆகிய ஊராட்சிகளில் நான்கு பாலங்கள் கட்டப்படும்.

* 15 அங்கன் வாடி மையங்கள், 18 நியாயவிலைக் கடைகள், 14 சமுதாய நலக் கூடங்கள், 7 பேரூராட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும்.

* கோயம்புத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மழைநீர் வடிகால் மற்றும் கான்கீரிட் சாலை ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* உக்கடம் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தினால் அகற்றப்பட்ட பேருந்து நிலையத்தினை ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் மறுசீரமைக்கப்படும்.

* ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளி வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஹாக்கி விளையாட்டு தரை அமைக்கப்படும்.

banner

Related Stories

Related Stories