இந்தியா

“எவ்வளவு தைரியம் இருந்தா இங்க கொண்டாடுவீங்க..” -கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுத்து இந்துத்வ கும்பல் அடாவடி

பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை இந்துத்துவ கும்பல் தடுத்து நிறுத்தியதோடு பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“எவ்வளவு தைரியம் இருந்தா இங்க கொண்டாடுவீங்க..” -கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுத்து இந்துத்வ கும்பல் அடாவடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் முன்னரே மாற்று மதத்தினர் மீது வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வந்தது இந்துத்துவ கும்பல் மற்றும் பாஜக. பாபர் மசூதி இடிப்பு முதல் மணிப்பூர் கலவரம் வரை வெறுப்பின் உச்சம் என்றே சொல்லலாம். இஸ்லாமிய பெண்கள் மீதான வன்முறை, ஆண்கள் மீதான தாக்குதல் இப்படி தொடர்ந்து பாஜக செய்து வந்த நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு இது மேலும் அதிகரித்தே காணப்படுகிறது.

முதலில் இஸ்லாமியர்களை முழுமையாக குறிவைத்துள்ள இந்துத்துவ கும்பல், தற்போது கிறிஸ்துவர்களையும் வெளிப்படையாகவே தாக்க தொடங்கியுள்ளது. கிறிஸ்துவர்களுக்கு எதிரான பிரச்சாரங்களை இந்துத்துவ கும்பல் தற்போது தீவிரமாக கையில் எடுத்துள்ளது.

“எவ்வளவு தைரியம் இருந்தா இங்க கொண்டாடுவீங்க..” -கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுத்து இந்துத்வ கும்பல் அடாவடி

அந்த வகையில் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட பொருட்களை பலரும் சாலையில் நின்று விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த சூழலில் கிறிஸ்துமஸ் பண்டிகை பொருட்களை இங்கு விற்பனை செய்யக்கூடாது என்று இந்துத்துவ கும்பல் அவர்களை மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனங்களை எழுப்பியது.

அந்த வகையில் பா.ஜ.க ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அமைந்துள்ள மெக்னடோ மாலில் (Magneto Mall), கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை இந்துத்துவ கும்பல் தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பொருட்களையும் சரமாரியாக உடைத்து சேதப்படுத்தி, இந்துத்துவ கும்பலின் கோஷத்தை எழுப்பினர்.

“எவ்வளவு தைரியம் இருந்தா இங்க கொண்டாடுவீங்க..” -கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுத்து இந்துத்வ கும்பல் அடாவடி

அதுமட்டுமின்றி பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலம், நல்பாரியில் உள்ள செயிண்ட் மேரிஸ் பள்ளியில் நுழைந்து, கிறிஸ்துமஸ் விழாவிற்கு உபயோகித்த பொருட்களை பஜ்ரங் தள் குண்டர்கள் தீயிட்டு எரித்துள்ளனர். அதோடு உத்தர பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் இப்படி இந்துத்துவ கும்பல், தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்துத்துவ கும்பலின் இந்த செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் தொடர்ந்து கண்டனங்களை எழுப்பி வருகிறது.

banner

Related Stories

Related Stories