இந்தியா

மத வெறுப்பு பேச்சு : கேரள பா.ஜ.க தலைவர் கைது -14 நாள் சிறை!

மத வெறுப்பு பேச்சு விவகாரம் தொடர்பாக கேரள பா.ஜ.க., தலைவர் பி.சி.ஜார்ஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மத வெறுப்பு பேச்சு : கேரள பா.ஜ.க தலைவர் கைது -14 நாள் சிறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மத வெறுப்பு பேச்சுகள் அதிகரித்து வருகிறது. பா.ஜ.க தலைவர்கள் முதல் அக்கட்சியின் தொண்டவர்கள் வரை எல்லோரும் மத வெறுப்பையே பரப்பி வருகிறார்கள்.

இந்நிலையில், கேரள பா.ஜ.க மூத்த தலைவர் பி.சி. ஜார்ஜ், கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் குறிப்பிட்ட ஒரு மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஈராற்றுபேட்டை போலீசில் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் புகார் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பி.சி. ஜார்ஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தானர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து பி.சி.ஜார்ஜை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், ஈராற்றுபேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து, நீதிமன்றம் பி.சி. ஜார்ஜை 14 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

banner

Related Stories

Related Stories