இந்தியா

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் : ஊழலை அங்கீகரிக்கும் நிர்மலா சீதாராமன்!

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நன்கொடை பத்திர திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் : ஊழலை அங்கீகரிக்கும் நிர்மலா சீதாராமன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2018ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு தேர்தல் நன்கொடை பத்திர திட்டத்தை கொண்டு வந்தது. பல்வேறு நிறுவனங்களை விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்திய பாஜக, தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் ரூ.8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை குவித்தது அம்பலமானது.

இதனிடையே, வெளிப்படைத்தன்மை இல்லாத இந்தத் திட்டம், கருப்பு பணத்தை அதிகரிக்கச் செய்யும் எனக் கூறி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் பல்வேறு நிறுவனங்களை மிரட்டி பா.ஜ.க எப்படி எல்லாம் நிதி பெற்றது என்ற விவரங்களும் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஒன்றிய பா.ஜ.க அரசின் மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திரம் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மேலும் PM Cares நிதி குறித்து வெளிப்படை தன்மையுடன் அறிவிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திர திட்டம் அமல்படுத்தப்படும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய நிர்மலா சீதாராமன், "உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரத்தை ரத்து செய்துள்ளது. அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேர்தல் பத்திர திட்டத்தை பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்படும். மேலும் கருப்புப் பணத்தை முழுமையாக ஒழிக்க இத்திட்டம் உருவாக்கப்படும்." என தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் பாஜக அரசு செயல்படும் என்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேட்டி உறுதிப்படுத்தி இருப்பதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories