இந்தியா

“எனக்கு இனி நீ அம்மா..” : தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மனைவியை துரத்திய கணவர் - நடந்தது என்ன?

தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததால் மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“எனக்கு இனி நீ அம்மா..” : தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மனைவியை துரத்திய கணவர் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகர் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு பெற்றோர்கள் ஏற்பாட்டில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு அந்த பெண், தனது கணவர் வீட்டில் மாமியார், மாமனார், காணார் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்.

“எனக்கு இனி நீ அம்மா..” : தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மனைவியை துரத்திய கணவர் - நடந்தது என்ன?

இந்த சூழலில் கடந்த 5-ம் தேதி அந்த பெண்ணின் கணவர், தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது மருமகள் என்றும் பாராமல் அந்த பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி தாக்கி, அவரது மாமனார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து வெளியே சொல்லக்கூடாது என்று அவரை மிரட்டவும் செய்துள்ளார்.

“எனக்கு இனி நீ அம்மா..” : தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மனைவியை துரத்திய கணவர் - நடந்தது என்ன?

இதையடுத்து தனது கணவர் வீட்டுக்கு வந்த பிறகு, மாமனார் தனக்கு செய்த கொடுமையை கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு ஆத்திரம் கொண்ட கணவர், உடனே தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். மேலும் "இனி நீ எனக்கு மனைவி அல்ல. என் தந்தையுடன் உடலுறவு கொண்டதால் எனக்கு நீ தாய்.." என்றுள்ளார்.

இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து மறுநாளே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அவர்கள், குற்றம்சாட்டப்பட்ட கணவர், பாலியல் வன்கொடுமை செய்த மாமனார் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுஸ் செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories